search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tharuvai Pond"

    • குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள தடைகளை அப்புறப்படுத்தி கால்வாயை சீர்படுத்த வேண்டும்.
    • கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆண்டு தோறும் மழை காலத்தில் இக்குளத்தை முழுமையாக நிரப்ப வேண்டும்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடார் குடியிருப்பு, ஆதியாகுறிச்சி ஆகிய ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் சார்பாக உடன்குடி முன்னாள் யூனியன் கவுன்சிலரும், ஊராட்சிமன்ற துணைத் தலைவருமான பிரபாகர் முருகராஜ் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், பொதுப்பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலே குறிப்பிட்டுள்ள 4 ஊராட்சிமன்ற பகுதியில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் விவசாய நிலங்களை பாதுகாக்கவும், தண்ணீர் பிரச்சனையை தீர்க்கவும், பனை, தென்னை போன்ற பல்வேறு விவசாயத்தை காப்பாற்றவும் குலசேகரன்பட்டினத்தில் தருவை குளத்தை குண்டும், குழியும் இல்லாமல் முழுமையாக சீர்படுத்த வேண்டும்.

    மேலும் குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாயில் உள்ள தடைகளை அப்புறப்படுத்தி கால்வாயை சீர்படுத்த வேண்டும். கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆண்டு தோறும் மழை காலத்தில் இக்குளத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். அப்படி நிரப்பினால் தான் இப்பகுதி உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். கிராம மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். வரும் மழை காலங்களுக்கு முன்பு இந்தப் பணியை முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×