search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea one death"

    தேனி அருகே பன்றிக் காய்ச்சலுக்கு டீக்கடைக்காரர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் மெயின் பஜார் வீதியை சேர்ந்தவர் மாதவன் (வயது52). டீக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

    தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்படவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

    ×