search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை"

    கோடை பருவத்தின் சராசரியை காட்டிலும் 60 மி.மீ., மழை அதிகம் கிடைத்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஜனவரி-பிப்ரவரி மாதங்களை கொண்ட குளிர் பருவத்தில் 15.22 மி.மீ., மழை பெய்தது. மார்ச் மாதத்தில் எதிர்பார்த்த மழையில்லை. சராசரியாக, 13.40 மி.மீ., பதிவாக வேண்டிய மழை, 6.31 மி.மீ., மட்டுமே பெய்திருந்தது.

    ஏப்ரல் மாதம் சராசரி 48 மி.மீ., மழை பெய்ய வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு 3மடங்கு அதாவது 127.95 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மே மாதத்தின் சராசரி 73.70 மி.மீ., மழை. ஆனால் 61.47 மி.மீ., பெய்தது.கடந்த 3 மாதங்களில் 17 நாட்கள் கனமழை பெய்து மாவட்டத்தை குளிர்வித்துள்ளது.

    மார்ச், மே மாதம் பெய்ய வேண்டிய மழைசராசரியை விட குறைவாக இருந்தாலும் ஏப்ரல் மாதம் 3 மடங்கு அதிக மழை பெய்ததால் கோடை பருவத்தின் சராசரியை காட்டிலும் 60 மி.மீ., மழை அதிகம் கிடைத்துள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில், இந்தாண்டு சராசரி அளவை காட்டிலும் மழை அதிகம் இருக்குமென வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. குளிர் மற்றும் கோடையில் இயல்பான அளவை தென்மேற்கு பருவமழை கை கொடுத்தால், மானாவாரி சாகுபடியை முன் கூட்டியே துவக்கவும் விவசாயிகள் தயாராக இருக்கின்றனர் என்றனர்.

    தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




    நாட்டில் பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ந்தேதி அன்று தொடங்கும். ஆனால் 3 தினங்களுக்கு முன்னதாக கடந்த 29-ந்தேதி அன்றே கேரளாவில் பருவ மழை தொடங்கி விட்டது.

    நாட்டில் பருவ மழை ஏற்கனவே கணித்ததை விட கூடுதல் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருத்யுசூசய் மொகபத்ரா கூறியதாவது:-

    தற்போதைய தென் மேற்கு பருவ மழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) சராசரி மழை பொழிவு 103 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் பருவ மழை பொழிவு 99 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் தற்போது கூடுதல் பருவ மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்யும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக நாட்டில் இந்த ஆண்டு பருவ மழை இயல்பான அளவை ஒட்டியே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.

    கடந்த ஆண்டு பருவ மழை 99 சதவீதம் (இயல்பு) இருந்தது. 2020-ல் இயல்புக்கு அதிகமாக 109 சதவீதமும், 2019-ல் பருவ மழை இயல்புக்கு அதிகமாக 110 சதவீதமும் இருந்தது.

    தற்போதைய பருவ மழை இந்தியாவிலும், தென் தீபகற்பத்திலும் இயல்பை விட அதிகமாக 106 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் 96 முதல் 106 சதவீதம் வரையும் இருக்கலாம்.

    ஒரு நல்ல பருவ மழை அதிகமான விளைச்சலை உறுதி செய்ய வாய்ப்பு உள்ளது.

    ×