search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ேரால்- டீசல்"

    பெரும் நசிவைச் சந்தித்து வரும் தொழிற்துறைக்கு மத்திய அரசு இதன் மூலம் பெரும் நன்மை அளித்துள்ளது.

    திருப்பூர்:

    மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோலுக்கான கலால் வரியை ரூ.9.50ம், டீசலுக்கு ரூ.7-ம் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இதன் மூலம் பெட்ரோல்-டீசல் விலை குறைந்துள்ளதால் திருப்பூர் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறுகையில், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் பல்வேறு தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

    தற்போது மத்திய நிதி அமைச்சர் இவற்றின் மீதான வரியை குறைத்து அறிவித்துள்ளார். இதனால் இவற்றின் விற்பனை விலை குறைந்துள்ளது.அதே போல் இரும்பு பொருள் இறக்குமதிக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஏற்றுமதிக்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் உள்நாட்டு வர்த்தகம் சீராக இருக்கும்.

    இந்த நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் ஆகியோருக்கு நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவிக்கிறோம். பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைப்பு நடவடிக்கை தொழில்துறையினரின்போக்கு வரத்து செலவுகளை குறைக்கும். இது போல் மத்திய அரசு பஞ்சு, நுால் விலை உயர்வை கட்டுப்படுத்தும்வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், இந்த அறிவிப்புக்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதன் மூலம் விலைவாசி குறையும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு போல் மாநில அரசும் தனது வரியை பாதியாக குறைத்தால் மேலும் தொழில் துறைக்கு நன்மை தருவதாக இருக்கும்.

    சாய ஆலை உரிமையாளர் சங்கசெயலாளர் முருகசாமி:- பெரும் நசிவைச் சந்தித்து வரும் தொழிற்துறைக்கு மத்திய அரசு இதன் மூலம் பெரும் நன்மை அளித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கிறோம். மீண்டும் விலை உயர்வு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் சங்க பொருளாளர் தேவராஜ் கூறுகையில், அனைத்து பகுதியிலும் பல்வேறு தொழில்கள் பல காரணங்களால் தொய்வடைந்து வருகிறது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான மத்திய அரசு வரிகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கையால் தொழிற்சாலைகளில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு குறையும். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மாநில அரசும் தனது வரியை குறைத்தால் இந்த மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றார்.

    ×