search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டா"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் தகுதியான மீனவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் உறுதியளித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு மீனவர்களிடம் இருந்து 132 கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன்பின் கலெக்டர் விஷ்ணுசந்திரன் பேசியதாவது:-

    மீன்பிடி தடைகாலம் முடிந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் சென்று வருவதுடன், உரிய எல்லை பகுதிக்குள் சென்று வர வேண்டும். அதேபோல் மீன்கள் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவனங்களை அழைத்துப்பேசி மீனவர்களுக்கு தங்கள் பொருளுக்குரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் மீனவர்கள் கோரிக்கையான வீட்டுமனை பட்டா தகுதியுடைய நபர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீனவர்கள் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான இழப்பீடு தொகை உரிய காலத்தில் வழங்கிட மீன்வளத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அதேபோல் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட் டுள்ளதை மீனவர்கள் கொண்டு வருவதற்கு ஏதுவாக தேவையான உதவிகளை மீன்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.

    கடற்கரை ஓரமுள்ள மீன் இறங்குதளம் அருகில் பயன்பாடற்ற தூண்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனியார் இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறும் கழிவு பொருட்களை கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன் அனுமதியின்றி இறால் பண்ணை நடத்துபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீலப்புரட்சி திட்டத்தில் வீடு கட்ட ஆணை பெற்று வீடு கட்டாதவர்கள் உடனடியாக கட்டுமான பணியினை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர்கள் கோபிநாத், ஜெயக்குமார், அப்துல்காதர், ஜெய்லானி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பணியிலிருந்து ஓய்வு பெற்று, 15 ஆண்டு ஆகிறது.
    • போலீசில் புகார் மனு கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.

    திருப்பூர் :

    பொங்கலூர் ஒன்றியம், கேத்தனூர் - எட்டமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், (வயது 73).பல்லடம் தாலுகா அலுவலகத்துக்கு தள்ளாடியபடி வந்த இவர் எனது பட்டாவை மீட்டு தாருங்கள் என அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

    இது குறித்து ஈஸ்வரன் கூறியதாவது:-

    ஈரோடு ரெயில் நிலையத்தில் கொடி அசைக்கும் வேலை பார்த்து வந்தேன். பணியிலிருந்து ஓய்வு பெற்று, 15 ஆண்டு ஆகிறது. மகள் திருமணமாகி தனியாக உள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இருந்தபோது, எனக்கு கேத்தனூரில்15 சென்ட் இடம் கொடுத்தார்.அந்த இடத்தின் பட்டா எனது பெயரில் உள்ளது.

    மனைவியும் இல்லாததால் தனியாக வீடு கட்டி வசித்து வருவதை அறிந்த சிலர் இரண்டு ஆண்டுக்கு முன் எனது வீட்டில் புகுந்து பட்டா சான்றிதழை பறித்துகொண்டு, விரட்டி அடித்து விட்டனர். அதில் முறைகேடாக அவர்களது பெயரை சேர்த்துள்ளனர்.தற்போது வீடும் இல்லாமல், ஓய்வூதியத்தை கொண்டுஒரு நேரம் மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். எம்.ஜி.ஆர்., கொடுத்த பட்டாவை எனக்கு மீட்டு தாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.முதியவரிடம் விசாரித்த அதிகாரிகள், இது குறித்து போலீசில் புகார் மனு கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்என கூறி அனுப்பி வைத்தனர்.

    ×