search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swamimalai"

    சுவாமிமலை அருகே சுற்றுலா வந்த மலேசியா தொழிலதிபர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சுவாமிமலை:

    மலேசியா கோலாலம்பூர் பகுதியை சேர்ந்தவர் அரைக்காவூர் (வயது 53). இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற்காக தமிழகம் வந்தார்.

    அவர் சுவாமிமலையை அடுத்த சுந்தரபெருமாள் கோவிலில் உள்ள தனது நண்பரின் தங்கை செல்வி என்பவரது வீட்டில் தங்கி சுற்றுலா தலங்களை பார்வையிட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 8-ந்தேதி மாரடைப்பு ஏற்பட்டது. அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அரைக்காவூர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இவர் மலேசியாவில் பிரபல தொழிலதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுவாமிமலை அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #Tasmac

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை அடுத்த திருவலஞ்சுழியில் கடந்த 30-ந் தேதி புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. திருவலஞ்சுழி அரசலாற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த கடையால் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் மாணவ- மாணவிளுக்கும் இடையூறு ஏற்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறினர். ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தால், அவரது உத்தரவின் பேரில் கடையை மூடுவோம் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இது குறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தீந்தமிழன் கூறியதாவது:-

    திருவலஞ்சுழி டாஸ்மாக் கடையைமூடக்கோரி முற்றுகை போராட்டம் செய்தோம். டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதின் பேரில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம். மாவட்ட நிர்வாகம் கடையை மூடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து டாஸ்மாக் கடை மேலாளர் திருஞானம் கூறும்போது,

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி 28 கடைகள் மூடப்பட்டு 15கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் கும்பகோணம் நகரத்தில் 5 கடைகளும், தாராசுரம் மற்றும் திருவலஞ்சுழி ஆகிய இரண்டு இடங்களில் புதியதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திருவலஞ்சுழியில் டாஸ்மாக் கடை பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்பட்டது என்றார். #Tasmac

    சுவாமிமலை அருகே குடிபோதையில் தம்பி வீட்டை சூறையாடிய அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே உள்ள மேலக்காவிரி அம்பேத்கார் நகரைச் சேர்ந்த குருநாதன் மகன் பாண்டியன் (வயது 35). இவரது அண்ணன் விநாயகமூர்த்தி (38).

    அண்ணன்- தம்பி அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விநாயகமூர்த்தி மது குடித்துவிட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனால் கணவரிடம் இருந்து தப்புவதற்காக அவரது மனைவி அருகில் உள்ள பாண்டியன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இதைதொடர்ந்து விநாயகமூர்த்தி தனது தம்பி பாண்டியன் வீட்டிற்கு சென்று என் மனைவிக்கு நீ எப்படி அடைக்கலம் கொடுக்கலாம் என்று கேட்டு வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை உடைத்து சூறையாடி விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி பாண்டியன் சுவாமிமலை போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ் பெக்டர் ரேகாராணி வழக்கு பதிவு செய்து விநாயகமூர்த்தியை கைது செய்தார்.

    ×