search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Tasmac"

    • தெற்கு மடத்தூர் பகுதியிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதிதாக டாஸ்மாக் அமைய உள்ள பகுதியிலிருக்கும் பாதை வழியாகதான் மாணவர்கள் அனைவரும் சைக்கிள்களில், வாகனங்களில் செல்லும் சூழ்நிலை ஏற்படும்.
    • தெற்கு மடத்தூர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    தென்காசி:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு மடத்தூர் பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் பீடி சுற்றும் தொழிலே இருந்து வருகிறது. இந்நிலையில் தெற்கு மடத்தூர் ஊராட்சியில் இருந்து 2.5 கிலோ மீட்டர் தொலைவில் பொட்டல்புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதி, அதேபோல் ஊரின் வடக்கே வெங்கடாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 கிலோ மீட்டர் தொலைவிலும் ஏற்கனவே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் தெற்கு மடத்தூர் கிராமத்தில் புதிதாக 3-வது டாஸ்மாக் கடையை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். அது தொடர்பான பணிகளும் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. எனவே தெற்கு மடத்தூர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தெற்கு மடத்தூர் பகுதியிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதிதாக டாஸ்மாக் அமைய உள்ள பகுதியிலிருக்கும் பாதை வழியாகதான் மாணவர்கள் அனைவரும் சைக்கிள்களில், வாகனங்களில் செல்லும் சூழ்நிலை ஏற்படும்.

    மேலும் டாஸ்மாக் கடை அமைய உள்ள பகுதியில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவிற்குள் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கி வருவதால் மது அருந்துபவர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும். எனவே தெற்கு மடத்தூர் பகுதியில் புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க கூடாது என கூறி தெற்கு மடத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவரும் காங்கிரஸ் நிர்வாகியுமான சிவகுமார் மற்றும் அப்பகுதியை சேர்ந்த அசோக், ‌ராஜா ‌என்ற அருணாசலம், முருகேசன், மாரிசெல்வம், தமிழரசன் ஆகிய இளைஞர்கள் ஒன்றாக இணைந்து தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இது குறித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அனைவரையும் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

    சுவாமிமலை அருகே புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #Tasmac

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை அடுத்த திருவலஞ்சுழியில் கடந்த 30-ந் தேதி புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. திருவலஞ்சுழி அரசலாற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த கடையால் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும், அந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் மாணவ- மாணவிளுக்கும் இடையூறு ஏற்படும் என்று அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறினர். ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ரேகாராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தால், அவரது உத்தரவின் பேரில் கடையை மூடுவோம் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இது குறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தீந்தமிழன் கூறியதாவது:-

    திருவலஞ்சுழி டாஸ்மாக் கடையைமூடக்கோரி முற்றுகை போராட்டம் செய்தோம். டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதின் பேரில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம். மாவட்ட நிர்வாகம் கடையை மூடாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து டாஸ்மாக் கடை மேலாளர் திருஞானம் கூறும்போது,

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி 28 கடைகள் மூடப்பட்டு 15கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் கும்பகோணம் நகரத்தில் 5 கடைகளும், தாராசுரம் மற்றும் திருவலஞ்சுழி ஆகிய இரண்டு இடங்களில் புதியதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. திருவலஞ்சுழியில் டாஸ்மாக் கடை பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தையில் தீர்வு காணப்பட்டது என்றார். #Tasmac

    ×