search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sulur worker murder"

    சூலூர் அருகே மில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் பட்டணம் அருகே உள்ளது நாகநாயக்கன்பாளையம். இந்த பகுதியில் உள்ள மில்லில் பீகாரை சேர்ந்த பிரகாஷ், போஜன் ஆகியோர் வேலை செய்து வருகிறார்கள். தனியே வீடு எடுத்து தங்கினர். இந்நிலையில் சம்பவத்தன்று பிரகாசுக்கும், போஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் பிரகாஷ் போஜனை தள்ளிவிட்டார். கீழே விழுந்த போஜனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி போஜன் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×