search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Street Compaign"

    • தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் மாநில தலைவர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகியவை பற்றி பேசினார்.
    • முன்னதாக சுதந்திரப் போராட்ட தியாகி கே.டி.கோசல்ராம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. திருச்செந்தூர் வட்டார ஆலோசகர் பழனிவேல் நாடார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகர தலைவர் ராஜமாதங்கண், ஆறுமுகநேரி நகர அமைப்பாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் மாநில தலைவர் மோகனசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகியவை பற்றி பேசினார். முன்னதாக சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் எம்.பி.யுமான கே.டி.கோசல்ராம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் காயல்பட்டினத்தில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    ஆறுமுகநேரி:

    மத்திய பா.ஜ.க. அரசு வலியுறுத்தும் பொது சிவில் சட்டத்தை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் காயல்பட்டினத்தில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் யாசர் அராபத் தலைமை தாங்கினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் தமிழ்க்குட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் மீனவர் அணி மாநில துணை செயலாளர் மங்கை சேகர், உடன்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்வாணன், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்பரிதி, காயல்பட்டினம் புறநகர் பகுதி செயலாளர் அம்பேத், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் முன்னோடி தமிழன், காயல்பட்டினம் நகர பொருளாளர் ரத்தினபுரி வாசு, உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான்வளவன், திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர் செஞ்சுடர், சாத்தான்குளம் ஒன்றிய துணை செயலாளர் சுரேந்தர், சமூக நல்லிணக்கப் பேரவை திருச்செந்தூர் ஒன்றிய துணை அமைப்பாளர் ராம்குமார், காயல்பட்டினம் நகர அமைப்பாளர் இசக்கிமுத்து, காயல்பட்டினம் நகர பொறுப்பாளர்கள் மாணிக்கராஜ், மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இஸ்லாமிய ஜனநாயக பேரவை காயல்பட்டினம் நகர அமைப்பாளர் நாகூர் மீரான் நன்றி கூறினார்.

    ×