search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Consumer Awarness"

    • தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் மாநில தலைவர் மோகனசுந்தரம் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகியவை பற்றி பேசினார்.
    • முன்னதாக சுதந்திரப் போராட்ட தியாகி கே.டி.கோசல்ராம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. திருச்செந்தூர் வட்டார ஆலோசகர் பழனிவேல் நாடார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகர தலைவர் ராஜமாதங்கண், ஆறுமுகநேரி நகர அமைப்பாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் மாநில தலைவர் மோகனசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம் ஆகியவை பற்றி பேசினார். முன்னதாக சுதந்திரப் போராட்ட தியாகியும், முன்னாள் எம்.பி.யுமான கே.டி.கோசல்ராம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா நன்றி கூறினார்.

    ×