search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri sri ravishankar"

    வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமர்நாத் யாத்திரையை ஒத்தி வைக்கும்படி பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். #AmarnathYatra #SriSriRavishankar
    பெங்களூரு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கிறார்கள். 60 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அமர்நாத் புனித யாத்திரையில் நேற்று வரை சுமார் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் என அமர்நாத் புனித யாத்திரை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



    இந்நிலையில், அம்ர்நாத் புனித யாத்திரை அமைப்பின் உறுப்பினரும், வாழும் கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமர்நாத் யாத்திரையை ஒத்தி வைக்கும்படி பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே பக்தர்கள் அமர்நாத் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இங்கு நிலவும் மழை மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் தங்கள் யாத்திரை ஒத்தி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    அமர்நாத் யாத்திரை ரக்ஷா பந்தன் தினமான ஆகஸ்ட் 26-ம் தேதி நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #AmarnathYatra #SriSriRavishankar
    ×