search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speaker Embalam Selvam"

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • ஏரி வாய்க்காலை ரூ.4.35 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் அரியாங்குப்பம் வட்டாரம் சார்பாக மணவெளி தொகுதி அபிஷேகம்பாக்கம் மற்றும் ஆண்டியார்பாளையம் தாணாம் பாளையம் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.27.23 லட்சம் மதிப்பில் பணிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    அதன்படி அபிஷே கப்பாக்கம் பகுதியில் தேடுவார்நத்தம் முதல் வன்னான் குளம் வரை உள்ள ஊரல் வாய்க்காலை ரூ.8.25 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல், மேட்டு மதகு மற்றும் பள்ள மதகு வாய்க்காலை ரூ.8.29 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல், ஆண்டியார் பாளையம் தானாம்பாளையம் பகுதியில் காட்டுப்பாளையம் முதல் உப்பனாரறு வரை உள்ள ஏரி வாய்க்காலை ரூ.6.33 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல் மற்றும் தானாம்பாளையம் குளம் முதல் புரணாங்குப்பம் ஆறு வரை உள்ள ஏரி வாய்க்காலை ரூ.4.35 லட்சம் மதிப்பில் தூர்வாரி ஆழப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திர குமரன், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், ராமன் இளநிலை பொறியாளர் சிவஞானம் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் லட்சுமி காந்தன், மாயகிருஷ்ணன், ஜானகிராமன், ஆனந்தன், ரமேஷ், ராஜன் குமார், தேனாம்பாளையம் பகுதி ஞானசேகர், ஜெயக்குமார், பெருமாள், நகமுத்து, பழனி, விமல், கந்தன், சகாயராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
    • அவரது ஆலோசனை அடிப்படையில் கட்டிட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் தற்போது இயங்கும் சட்டமன்ற வளாகம் பழமையான கட்டிடம் என்பதாலும் இட

    நெருக்கடியாலும் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    புதுவை ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் அருகில் சுமார் 15 ஏக்கரில் தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டமன்ற வளாகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அங்கு தரைத்தளம் உள்ளிட்ட 6 தளங்களைக் கொண்ட புதிய சட்டப்பேரவை வளாகம் அமைய உள்ளது.

    அதற்காக மத்திய அரசு ரூ.440 கோடி அளிக்க கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் தயாரிப்பில் டெல்லியை சேர்ந்த தனியார் வடிவமைப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. கடந்த மாதம் சட்டமன்ற வெளிப்புற தோற்றம் குறித்து முதல்- அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்க ளிடம் தனியார் நிறுவனத்தினர் விளக்கினர். அப்போது சில விளக்கங்களை கேட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி சில மாற்றங்களை செய்ய உத்தரவிட்டார்.

    இந்த நிலையில் கட்டிட உள்புற வடிவமைப்பு மாதிரியை முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோரிடம் தனியார் நிறுவனத்தினர் மின்னணு திரையில் காட்சிப்படுத்தி விளக்கினர். இதில் சில மாற்றங்களை செய்ய முதல்-அமைச்சர் அறிவுருத்தினார்.

    புதுவை பொதுப் பணித்துறை முதன்மைப் பொறியாளர் சத்தியமூர்த்தி, பொறியாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுபற்றி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறியதாவது:-

    புதிய சட்டமன்ற கட்டிடங்கள் எண்ணிக்கை, அறைகளின் மாதிரி வடிவம், வளாகத்தில் அமையும் கட்டிடத் தொகுப்புகள் விவரம் ஆகியவற்றை பார்வையிட்டோம். அப்போது அறைகளில் சில மாற்றங்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி சுட்டிக்காட்டினார். அவரது ஆலோசனை அடிப்படையில் கட்டிட வடிவமைப்பில் மாற்றம் செய்யப்படும்.

    ஓரிரு நாளில் கட்டிட வடிவமைப்பு பணி நிறைவடைந்து கருத்துரு தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அதிகாரிகளுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவு
    • மறு சீரமைப்பு பணிகளை விரைந்து செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் ராஜீவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்கட்டமை ப்பு மேம்படுத்துதல் மற்றும் தரம் உயர்த்துதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று சட்டசபை வளாகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார்.

    இதில் பள்ளி உயர்கல்வித்துறை இயக்குனர் அமன் சர்மா, பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்சினி, இணை இயக்குனர் சிவகாமி, கல்வித்துறை முதன்மை அதிகாரி தனசெல்வன் நேரு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாணிக்க வாசகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், மணவெளி தொகுதியில் உள்ள அரசு கல்லூரி மற்றும் அனைத்து பள்ளிகளில் தேவைப்படுகின்ற உள்கட்டமைப்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளை விரைந்து செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த பள்ளி ஆசிரியர்கள் முயற்சி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • சசிகுமார், பழனிவேல், தனுசு, செந்தில், இளஞ்செழியன், முரளி, தங்கதுரை, என். எஸ். கே. மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில்

    மணவெளி தொகுதியில் இடையார்பாளையம் பகுதியில் உள்ள குடுவையாறு கரையை ரூ.25.90 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்படுகிறது.

    மேலும் மணவெளி பகுதியில் உள்ள செட்டிகுளம் மற்றும் அதன் வாய்க்காலை ரூ. 7.16 லட்சம் மதிப்பில் ஆழப்படுத்தி வாய்க்காலை மேம்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

    இப்பணிகளை தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகுமார், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், ராமன், இளநிலை பொறியாளர் சிவஞானம் மற்றும் முக்கிய பிரமுகர்களான தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், இடையார்பாளையம் பகுதி முக்கிய பிரமுகர்கள் அர்ஜுனன், நாகராஜ், கூட்டுறவு சங்க இயக்குனர் பழனி, என்ற தன்ராஜ், சீனிவாசன், ராஜாராமன், மணவெளி பகுதி முக்கிய பிரமுகர்கள் கலைவாணன், முருகன், பன்னீர், சசிகுமார், எஸ்.வி .எஸ். குமரன், ராமச்சந்திரன், சசிகுமார், பழனிவேல், தனுசு, செந்தில், இளஞ்செழியன், முரளி, தங்கதுரை, என். எஸ். கே. மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மீன்பிடி களன்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான டீசல் நிலையம் அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடர் நடவடிக்கை எடுத்தார்.
    • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் நல்லவாடு தெற்கு பகுதியில் புதிய டீசல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி நல்லவாடு மீனவ கிராமத்தில் அப்பகுதி மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்பிடி களன்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான டீசல் நிலையம் அமைக்க சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடர் நடவடிக்கை எடுத்தார்.

    அதன் புதுவை அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பயன்படுத்த உரிமை விதிகளின்படி புதுவை மாநில மீனவர் கூட்டமைப்பு சம்பளத்திற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் நல்லவாடு தெற்கு பகுதியில் புதிய டீசல் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பொதுப்பணித்துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, இணை இயக்குனர், துணை இயக்குனர், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் நலவாடு கிராம பஞ்சாயத்தார்கள் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், சக்திபாலன், கிருஷ்ண மூர்த்தி ரெட்டியார், வடிவேலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் மீன்பிடி படகு உரிமையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த டீசல் பங்க் சுமார் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்குகள் மற்றும் 2 பம்புகள் அமைக்கப்பட உள்ளது.

    • ரூ.3.35 லட்சம் வீதம் 3 பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை எல்.ஐ.சி. வீட்டுவசதி வாரியம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து பூரணாங்குப்பம், புதுக்குப்பம் மற்றும் தானம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கு தலா ரூ.3.35 லட்சம் வீதம் 3 பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பூமிபூைஜ செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், வேளாண் கடன் வழங்கும் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×