என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sengundram youth murder"
செங்குன்றம்:
சென்னை மாதவரத்தை சேர்ந்தவர் ராகுல் (வயது 26). வழிப்பறி கொள்ளையனான இவர் மீது சென்னை சோழவரம், எம்.கே.பி. நகர், வியாசர்பாடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் ராகுல் நேற்று இரவு 12 மணி அளவில் செங்குன்றத்தை அடுத்த எடப்பாளையம் பெரியார் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று வந்த 6 பேர் கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
ராகுல் வெட்டிக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது.
அவர் எதற்காக இரவு 12 மணிக்கு அங்கு வந்ததார். அவரை வெட்டிக் கொன்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்