search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sathanur"

    சாத்தனூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரூ.2 ஆயிரம் கடன் தகராறில் விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60) விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடைய அண்ணனிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 ஆயிரம் கடன் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு கோவிந்தசாமி, சாத்தனூர் பஸ்நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தார்.

    அப்போது ராஜ்குமார் அங்குவந்தார். அவர் தனது அண்ணனிடம் வாங்கிய பணத்தை ஏன் திருப்பிகொடுக்கவில்லை என்று கோவிந்தசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் பணத்தையும், வட்டியையும் கொடுத்துவிட்டதாக கூறி உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், கோவிந்தசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் கோவிந்தசாமி மயக்கம்போட்டு கீழே விழுந்துள்ளார்.

    அப்போது அவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் அவரை அருகில் உள்ள தண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு சென்ற சிறிது நேரத்தில் கோவிந்தசாமி இறந்துவிட்டார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் சாத்தனூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து ராஜ்குமாரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரூ.2 ஆயிரம் கடனுக்காக விவசாயி ஒருவர் அடித்துக்கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×