என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rs. 500 notes. kadayanallur"
- கடையநல்லூர் அருகே பெண் ஒருவர் பள்ளி சீருடை வாங்க பணம் எடுத்தபோது ஏ.டி.எம். எந்திரத்தில் கிடைத்த கிழிந்த ரூ.500 நோட்டுகளால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
- 8 நோட்டுகள் கிழிந்து பேப்பர் வைத்து ஒட்டப்பட்ட நிலையில் இருந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள மேலக்கடையநல்லூர் பூங்கா அருகில் பண்பொழி சாலையில் தனியார் நிறுவன ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள முக்கிய பகுதியில் இந்த ஏ.டி.எம். இருப்பதால் மற்ற வங்கி ஏ.டி.எம். மையத்தை விட பொதுமக்கள் இதனை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
நேற்று மேல கடையநல்லூர் பஜனை மட தென்வடல் தெருவை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி மாரியம்மாள் அந்த ஏ.டி.எம்.மிற்கு வந்து ரூ.9 ஆயிரம் எடுத்தார்.
அப்போது அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வந்த 500 ரூபாய் நோட்டுகளில் 8 நோட்டுகள் கிழிந்து பேப்பர் வைத்து ஒட்டப்பட்ட நிலையில் இருந்தது. மேலும் சில நோட்டுகள் கரையான் அரித்த நோட்டுகளாக இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே கணக்கு வைத்திருந்த வங்கி மேலாளரிடம் புகார் கூறியதற்கு, சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். எங்கள் வங்கியை சேர்ந்தது இல்லை என்பதால் இங்கு புகார் செய்ய முடியாது என்று தெரிவித்து விட்டனர்.
சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன ஏ.டி.எம். ஊழியரிடம் புகார் தெரிவித்தபோது, அவர் இதுகுறித்து நெல்லையில் உள்ள அந்த ஏ.டி.எம்.மின் மண்டல அலுவலகத்தில் புகார் செய்யுமாறு கூறிவிட்டார். இதேபோல் மற்ற வாடிக்கையாளர்கள் சிலருக்கும் கிழிந்த நோட்டுகள் வந்ததாக தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், எனது கணவர் சென்னையில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். மகளின் பள்ளி சீருடைகள் வாங்க அனுப்பிய பணத்தை எடுத்த போது இவ்வாறு உள்ளது.
ஆனால் அதில் இருந்து வினியோகம் செய்யப்படும் நோட்டுகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பது வேதனைக்குரியது. இதுபோன்ற தனியார் ஏ.டி.எம்.மையங்களை வங்கி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்