என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "robber arrested"
- பண்ருட்டி அருகேபெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
- நகை செல்போன் ஆகியவைபோலீசார் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில்அடைத்தனர்
கடலூர்:
பண்ருட்டி அருகே காடாம்பு லியூர்கொஞ்சிகுப்பம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யானந்தன் இவரது மனைவி ராதா (37). இவர், காடாம்புலியூர் மாயா கார்டன் ரவி என்பவரின்தோப்பில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர்இவரை மிரட்டி இவர் அணிந்து இருந்த செயின்மற்றும் செல்போ னை பறித்துசென்றா ர்.
இதுகுறித்து காடாம்பு லியூர் போலீசா ர்வழக்குபதிவுசெய்து விசா ரணை நடத்திவந்தனர். கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் உத்தரவின் பேரின் பண்ருட்டி துணைபோலீ ஸ்சூப்பிரண்ட் சபியுல்லா மேற்பார்வையில் காடாம்பு லியூர் இன்ஸ்பெக்ட ர்ராஜதாமரை பாண்டியன்,சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், போலீசார் ரகு மர்மஆசாமியை வலைவீசி தேடி வந்தனர்.
நேற்று சாத்திப்பட்டு பஸ்நிறுத்தம் அருகில் போலீசா ர்வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையி ல்காடாம்புலியூர் அடுத்த தெற்குமேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ( 27 ) என தெரிய வந்தது. இவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணிடம் நகை பறித்தை ஒப்பு க்கொண்டார்
இதனை தொடர்ந்துஅவரை கைது செய்துஅவரிடமிருந்து நகை செல்போன் ஆகியவைபோலீசார் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில்அடைத்தனர்
மதுரை மாநகரில் ரவுடிகள் அட்டகாசம் தொடர்கதையாகி வருகிறது. எனவே இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் ராஜசேகர் மேற்பார்வையில், அண்ணா நகர் உதவி கமிஷனர் சிவக்குமார் அறிவுரையின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அம்மா திடல் பகுதியில் பதுங்கி இருந்த வாலிபர் ஒருவர், போலீசாரை கண்ட தும் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து நீண்ட அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அண்ணா நகர் போலீசார் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அவர் யாகப்பா நகர், அப் பாஸ் தெருவை சேர்ந்த சபரி என்கிற சபரிராஜ் (வயது 31) என்பது தெரிய வந்தது. இவர் மீது அண்ணா நகர் மட்டுமின்றி மாட்டுத்தாவணி, கருப்பா யூரணி ஆகிய போலீஸ் நிலையங்களிலும் வழிப்பறி, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சாலையில் வருவோரை அரிவாள் முனையில் மிரட்டி பணம் பறிப்பதற்காக சபரிராஜ், பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் பகுதியில் பதுங்கி இருந்து உள்ளார்.
பாண்டி கோவில் ரிங் ரோடு பகுதியில் வழிப்பறி கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்த தனிப்படை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா பாராட்டினார்.
கடந்த சில நாட்களாக கிருமாம்பாக்கம், பாகூர், தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.
இதையடுத்து மோட்டார் சைக்கிள் திருடனை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ரகீம் உத்தரவிட்டார். இந்த நிலையில் கிருமாம்பாக்கம் போலிஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் மோட்டார் சைக்கிள் திருடன் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த செந்தில் (வயது 34) என்பவன் மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 17 திருட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட செந்தில் மோட்டார் சைக்கிள் திருடுவதில் கைதேர்ந்தவன் என்பதும், இவன் மீது தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்