search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "renovation"

    ரூ.5 கோடி செலவில் சி.சி.டி.வி. கேமரா, சோலார் மின் வசதியுடன் தி.நகர் நடேசன் பூங்கா, ஜீவா பூங்கா சீரமைத்து திறக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் தி.நகர் நடேசன் பூங்கா, ஜீவா பூங்கா, ரூ.5.2 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது. வெங்கட் நாராயணா சாலையில் உள்ள நடேசன் பூங்கா குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பூங்காக்களில் நடைபயிற்சி செல்ல நவீன நடைபாதைகள், சிறுவர் விளையாட்டுத் திடல், கிரானைட் இருக்கைகள், மின்வசதி, பசுமை புல் தரை, மரக்கன்றுகள், நிழல் கூடாரம், அமைக்கப்பட்டுள்ளது.

    குற்றச் செயல்களை தடுப்பதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் பூங்காவில் சி.சி.டி.வி. கேமராக்கள், சோலார் மின்வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் சார்ஜ் பாயிண்ட்கள், திறந்த வெளி உடற்பயிற்சி தளம், கூழாங்கற்கள் நடை பாதை, இயற்கை கருங்கல் நடைபாதை, செயற்கை நீருற்று, அலங்கார மின் விளக்குகள், இறகு பந்து மைதானம், புல்தரை செயற்கை குன்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையற்றோருக்காக சிறப்பு நடைபாதை வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளது.

    பொது மக்கள் பயன்பாட்டுக்காக மறுசீரமைக்கப்பட்ட இந்த 2 பூங்காக்களை அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், திறந்து வைத்தனர். 50 ஆயிரம் பேர் இந்த பூங்காவினால் தினமும் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×