search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajapalayam student molestation"

    ராஜபாளையம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்ததாக போஸ்கோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் தெற்கு மலையடிபட்டியைச் சேர்ந்த சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் தனியார் நூற்பு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர்.

    அவர்கள் இரவு வேலைக்குச் செல்லும்போது தாத்தா வீட்டில் மாணவி தங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு தாத்தா வீட்டில் இருந்த மாணவி, திண்ணையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு அவளை காணவில்லை. வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர், மகளை தேடினர்.

    இந்த நிலையில் பக்கத்து தெருவில் மாணவி அழுது கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பெற்றோர் அங்கு சென்று அவரை மீட்டுவந்து விசாரித்தனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் வெனிஸ்குமார் (வயது 25) கத்தியை காட்டி மிரட்டி மாணவியை, அந்தப் பகுதியில் ஆள் இல்லாத வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் மாணவி தெரிவித்தார்.

    அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின் கீழ் வெனிஸ் குமார் கைது செய்யப்பட்டார். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான மாணவி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×