என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Public Relations Camp"
- விக்கிரவாண்டியில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 140 பேருக்கு இலவச மனைபட்டா வழங்கப்பட்டது.
- ரூ. 19 லட்சம் மதிப்பீ ட்டில் 140 பேருக்கு இலவச மனைப்பட்டா, திருமண உதவித்தொகை, ஓய்வூதியம், வேளாண்மை, தோட்டக் கலைத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே பனையபுரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, பொது மக்களி டமிருந்து குறைகேட்பு மனுக்களை பெற்றார். பின்னர் உடனடி தீர்வாக ரூ. 19 லட்சம் மதிப்பீ ட்டில் 140 பேருக்கு இலவச மனைப்பட்டா, திருமண உதவித்தொகை, ஓய்வூதியம், வேளாண்மை, தோட்டக் கலைத்துறை சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தாசில்தார் இளவரசன், மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், தனி தாசில்தார் கணேஷ், வட்ட வழங்கல் அலுவலர் வேலு, வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன், தோட்டக்கலைத்துறை அலுவலர்அனுசுயா, வருவாய் ஆய்வாளர்கள் சார்லின், ராஜேஷ், திருமதி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிதுரை, கண்காணிப்பு குழு உறுப்பினர் எத்திராசன், ஊராட்சி மன்ற தலைவி காந்தரூபி வேல்முருகன், தொழில் நுட்ப அணி ரகுபதி உட்பட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
- மேல்மலையனூர் அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 203 பயனாளிகளுக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருவாய் வட்டாட்சியர் கோவர்தன் அனைவரையும் வரேவேற்றார்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் தாலுக்கா வளத்தி ஊராட்சி யில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலு வலர் மகாராணி தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஒன்றிய பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருவாய் வட்டாட்சியர் கோவர்தன் அனைவரையும் வரேவேற்றார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 203 பயனாளிகளுக்கு 7 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியதோடு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு திட்டதாசில்தார் செல்வகுமார், மண்டல துணை வட்டாட்சியர் நாராயணமூர்த்தி, துணைசேர்மன் விஜயலட்சுமி முருகன், மாவட்ட கவுண்சிலர் செல்வி இராமசரவணன்,ஒன்றிய கவுன்சிலர் கலா நாராயணமூர்த்தி, ஷாகின் அர்ஷத், பெருமாள், சக்தி, யசோதைரை சந்திரகுப்தன், ஜெயந்திஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெய்சங்கர், துணைத்தலைவர் கோவிந்தன்,வருவாய்ஆய்வாளர்கள்சுதாகர், ஏழுமலை, தஸ்தகீர்,நிர்வாகிகள் சரவணன், எஸ்.பி.சம்பத், குமார் மணிகண்டன், கந்தவேல், தேவனூர் ஆறுமுகம், பெருவளூர் பாபு, உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- முகாமில் முதியோர் உதவித்தொகை காது மற்றும் வாய் பேசஇயலா–தவர்களுக்கு செல்போன் வழங்கபட்டது.
- வருவாய்த்துறை மூலம் பட்டா மாற்றம் என சுமார் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கை–யற்கண்ணி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழ–ங்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வ.கீரனூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
இதில் முதியோர் உதவித்தொகை காது மற்றும் வாய் பேசஇயலாதவர்களுக்கு செல்போன் வழங்கபட்டது.
வேளாண்மைத் துறை மூலம் மருந்து தெளிப்பான் இயந்திரம் வருவாய்த்துறை மூலம் பட்டா மாற்றம் என சுமார் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மேலும் இந்த முகாமில் குன்னம் வட்டாட்சியர் அனிதா, சமூக நல தாசில்தார் சின்னத்துரை, வேப்பூர் ஒன்றிய துணை தலைவர் செல்வராணி வரதராஜன்,
வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், மனோகரன், தீரன் சின்னமலை, சேஷாத்திரி, ராஜேஷ் கண்ணா, ராஜேஷ்வரி வளர்மன்னன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்