என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "private finance company employee killed"
மேல்மலையனூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா அரும்பலூரை சேர்ந்தவர் ஜெகதீசன்(வயது 28). இவர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் ஜெகதீசன் பணிக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள கணபதிபுரம் சாலையோரத்தில் ஜெகதீசன் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார்.
பிணத்தின் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று சாய்ந்த நிலையில் கிடந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன்பின்னர் அவர் அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு சாலையோரம் பிணமாக கிடந்த ஜெகதீசன் உடலை பார்வையிட்டனர். அவரது உடலில் ரத்த காயங்கள் இருந்தது.
அவரது யாராவது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கொலை செய்து பிணத்தை வீசி சென்றார்களா? அல்லது வாகனம் மோதி அடிப்பட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஜெகதீசன் இறந்த தகவல் குறித்து அரும்பலூரில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்