search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Present"

    • கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி களுக்கு கல்வி விழிப்புணர்வு மற்றும் கூட்டங்கள் நடத்தும் பயன்பாட்டிற்காக கோவில்பட்டி கம்மவார் அறக்கட்டளை சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • அறக்கட்டளை தலைவர் வி.பி.எஸ்.சுப்பையா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அதிகாரி சின்னராஜ் கலந்து கொண்டார்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி களுக்கு கல்வி விழிப்புணர்வு மற்றும் கூட்டங்கள் நடத்தும் பயன்பாட்டிற்காக கோவில்பட்டி கம்மவார் அறக்கட்டளை சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒலி பெருக்கி சாதனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    அறக்கட்டளை தலைவர் வி.பி.எஸ்.சுப்பையா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அதிகாரி சின்னராஜ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் வி.பி.எஸ். சுப்பையா தலைமை ஆசிரியை ஜெயலதாவிடம் ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அறக் கட்டளை உறுப்பினர்கள் பி.ஆர்.எஸ்.சீனிவாசன், தொழிலதிபர் விநாயகா ரமேஷ், வரதராஜன், ரவிச்ச ந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

    ×