search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pottal Madasamy Temple"

    • சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நாளை பொட்டல் மாடசாமிக்கு இரவு 8மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

    சுரண்டை:

    சுரண்டை சிவகுருநாதபுரம் பொட்டல் மாடசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 6-ந்தேதி காலையில் விக்னேஸ்வரா பூஜை, புண்யாஹ வாசனம், கணபதி ஹோமம் ,மகாலட்சுமி ஹோமம், சுதர்ஸன ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோமாதா பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடந்தது. மாலையில் குற்றாலத்தில் இருந்து 61 குடத்தில் தீர்த்தம் எடுத்து வருதல், சுரண்டை சிவகுருநாதபுரம் சிவகுருநாதர் சமேத சிவகாமி அம்பாள் கோவிலில் குற்றால தீர்த்தம் அழைத்து பொட்டல் மாடசாமி கோவில் மேல தானங்கள் முடங்க ஊர் விளையாடி வந்து பரிவார தேவதைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    கால யாக பூஜை, விமான கலசம் பிரதேச தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. நான்காம் கால பூஜை தீபாராதனை யாத்ராதானம், கலசங்கள் புறப்பாடு பொட்டல் மாடசாமி கோவில் விமானம் அதனை தொடர்ந்து மூலாலயம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்ட பந்தன கும்பாபிஷேக நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரங்களும் கூடிய சிறப்பு பூஜைகள், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. நேற்று இரவு அய்யாவழி அருள் இசை புலவர் சிவச்சந்திரன் வழங்கும் சிறப்பு ஆன்மிக கச்சேரி நடந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) பொட்டல் மாடசாமிக்கு இரவு 8மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. இரவு 9 மணிக்கு மகுட ஆட்டம் நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் கமிட்டியாளர்கள் ஸ்ரீ பொட்டல் மாடசாமி குடும்ப த்தினர்கள், இளைஞர் அணி சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    ×