search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pettai"

    • தினமும் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருகின்றனர்.
    • காத்திருப்பு அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    நெல்லை:

    பேட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு மகப்பேறு மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் பார்க்கப்படுகிறது. தினமும் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பரிசோதனைக்காக வருகின்றனர்.

    இவர்கள் உட்காருவதற்காக மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத தால் வெயிலில் உட்கார்ந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படுவதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    கர்ப்பிணிகள் மற்றும் பிற நோயாளிகள் உட்காருவதற்காக ரூ.20 லட்சம் செலவில் காத்திருப்பு அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.

    தொடர்ந்து அஸ்திவாரம் போடுவதற்காக பெரிய குழிகள் தோண்டப்பட்டன.ஆனால் குழிகள் தோண்டப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

    இதனால் கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகள் மருத்துவ மனைக்கு பரிசோ தனைக்காக மருத்துவரை பார்க்க செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக பணிகளை தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இங்கு கடந்த ஒரு மாத காலமாக குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளது.
    • நோய் பரவும் அபாயம் உள்ளதால் குப்பைகளை நாங்களே அகற்றும் பணியில் களமிறங்கி உள்ளோம்.

    நெல்லை:

    பேட்டை ரூரல் பஞ்சாயத்துக்குட்பட்ட கோடீஸ்வரன் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இந்த வீடுகளில் தினமும் தேங்கும் குப்பைகளை பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரித்து அப்புறப்படுத்தி வந்துள்ளனர்.

    ஆனால் கடந்த சில நாட்களாக குப்பைகளை எடுக்க யாரும் வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் இன்று குப்பைகளை தாங்களே அகற்றினர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    இங்கு கடந்த ஒரு மாத காலமாக குப்பைகள் மலைபோல் தேங்கி உள்ளது.இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த குப்பைகளை பஞ்சாயத்து மூலம் அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே இன்று நாங்களே குப்பைகளை அகற்றும் பணியில் களமிறங்கி உள்ளோம். மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×