search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol bomb incident"

    • இரண்டு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருவதாக போலீஸ் தகவல்.

    கோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த 2 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சதாம் உசேன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    தற்போது சதாம் உசேன் துடியலூர் பி.எப்.ஐ. அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளார், இரண்டு பிரிவுகளில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் இவருடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தலைமறைவாக உள்ளவர்களை போலீஸ் தேடி வருகிறது என்றும்  காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

    ×