என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "People's Grievance Camp"
- வள்ளியூர் கோட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகம் வள்ளியூரில் நடைபெற்றது.
- மின் நுகர்வோர்கள் கேட்கிற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அறிவுரை வழங்கப்பட்டது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட வள்ளியூர் கோட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகம் வள்ளியூரில் நடைபெற்றது.
அதிகாரிகளுக்கு உத்தரவு
கூட்டத்திற்கு நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோட்ட செயற்பொ றியாளர் வளன்அரசுக்கும் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் கோட்ட த்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர் களும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்தவுடன் மின் பொறி யாளர்கள் மற்றும் அலுவல ர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் பேசும் போது, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் காற்று அதிகம் வீசுவதால் மின் பாதை களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய அருகில் செல்லும் மரக்கிளைகளை உடனடியாக அப்புறப் படுத்துவதற்கு விரைந்து நடவடி க்கை எடுக்க உத்தர விட்டார்.
சேவை மையம்
விநியோகப் பிரிவில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உண்டான மின்மாற்றிகளை முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், வள்ளியூர் கோட்ட பகுதியில் நடை பெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொ ண்டு பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.
மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கிற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரி விக்க அறிவுரை வழங்கி னார். பொதுமக்கள் மின்சா ரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்த மான அனைத்து தேவை களையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்