search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people on attacked"

    கம்பம் அருகே வாலிபரை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கம்பம் நெல்லுகுத்தி புளியமரத் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது19). அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் (24) என்பவர் பாண்டியனின் மகளை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார்.

    இதனை பாண்டியனும், கார்த்திகேயனும் தட்டி கேட்டனர். இதனால் இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று கார்த்திகேயன் கம்பம் இ.பி.ஆபீஸ் அருகே சென்றார்.

    அப்போது அங்கிருந்த அரவிந்த் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கார்த்திகேயனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த அவர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் பாண்டியன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வாலிபரை தாக்கிய அரவிந்த், மணிகண்டன், சுரேஷ், காடையன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர்.

    ×