என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Parliamentary Committee"
- ஊட்டியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை கட்டிட பணிகளை பாா்வையிட்டனர்.
- பொக்காபுரம் பகுதியில் மழையினால் வீடுகள் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் உணவுப் பொருள்களை வழங்கினா்.
ஊட்டி:
ஊட்டியில் உள்ள அரசு விருந்தினா் மாளிகையில், தமிழக சட்டப் பேரவை ஏடுகள் கு ழு தலைவா் ராமகிருஷ்ணன் தலைமையில், கூடுதல் செயலாளா் நாகராஜன், உறுப்பினா்கள் நல்லதம்பி, பொன்னுசாமி, அப்துல் வஹாப், அலமேலு, தேன்மொழி ஆகியோா் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் ஏடுகள் குழு தலைவா் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-தமிழகத்தில் உணவு உற்பத்திக்கு ஆதாரமாக விளங்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் மூலம் ஓராண்டில் 1 லட்சம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடா்ந்து ஊட்டியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை கட்டிட பணிகளை பாா்வையிட்டு, பொக்காபுரம் பகுதியில் மழையினால் வீடுகள் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் உணவுப் பொருள்களை வழங்கி னாா்.
பின்னா் பைக்காரா இறுதி நிலை நீா் மின்திட்ட மின் நிலையம், மாயாறு மின் நிலையத்தின் செய ல்பா டுகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொ ண்டாா்.
இந்த ஆய்வின்போது, கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி, ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், ஊட்டி தாசில்தார் ராஜசேகா், கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதா், ஊட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் நந்தகுமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்