search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "panimaya matha"

    புனித வெள்ளியையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று காலை சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.
    கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகையையொட்டி 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏசு கிறிஸ்துவின் தலையில் முட்கிரீடம் அணிவித்து, சிலுவையை சுமக்க செய்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

    இதனை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளியன்று ஏசு கிறிஸ்து பட்ட துயரங்களை விளக்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடத்தப்படுகிறது.

    அதன்படி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று காலை சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. இதில் சிலுவையை சுமந்தவாறு உள்ள ஏசுவின் உருவச்சிலையை கிறிஸ்தவ மக்கள் ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு சென்றனர். சிலுவை பாதை வழிபாட்டில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். மக்களுக்கு மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.

    மாலையில் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது மக்கள் சிலுவையில் முத்தமிட்டு வழிபாடு செய்து பசிப்பிணி காணிக்கை செலுத்தினர். அதன்பிறகு ஏசு உயிர்நீத்ததன் அடையாளமாக ஆலயங்கள் மூடப்பட்டன.
    தூத்துக்குடி திருமந்திர நகர் பனிமய மாதா ஆலய சப்பர பவனி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
    ஏழுகடல் துறையுடன் எல்லோருக்கும் ஏக அடைக்கலத்தாயாக எழுந்தருளி அன்போடு ஆட்சி புரியும் தூத்துக்குடி திருமந்திர நகர் பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பனிமயமாதா ஆலயத்தின் 436-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், அருளிக்க ஆசீர் நடந்தது. பல்வேறு தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் நடத்தப்பட்டன. கடந்த 29-ந் தேதி புதுநன்மை, நற்கருணை பவனியும், நேற்று முன்தினம் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று அன்னையின் சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு கோட்டாறு பிஷப் நசரேன் சூசை தலைமையில் 2-ம் திருப்பலியும் நடந்தது. காலை 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது. 10 மணிக்கு தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திருப்பலி நடந்தது. மதியம் 12 மணிக்கு திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் நன்றி திருப்பலி நடந்தது. மாலை 3 மணிக்கு ஜெபமாலை, அருளிக்க ஆசீர் நடந்தது.

    இதைத்தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி ஆலயத்தை சுற்றிலும் திரண்டு இருந்த மக்கள் அன்னையின் சப்பரத்தை தூக்கி வந்தனர். அப்போது கூடியிருந்த திரளான மக்கள் ‘மரியே வாழ்க’ என்று கோஷம் எழுப்பினர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் பூக்களை தூவியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக பிரார்த்தனை செய்தனர். அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர். சப்பரம் கோவிலின் பின்புறமாக பெரியகடை தெரு, கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக ஆலய வளாகத்தை வந்தடைந்தது.

    பனிமயமாதா ஆலய சப்பர பவனியையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிமாவட்ட போலீசார் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஏராளமான போலீசார் சாதாரண உடையில் பணியில் ஈடுபட்டனர்.

    விழாவையொட்டி தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில் ஆலய பங்குதந்தை லெரின் டிரோஸ் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பனிமயமாதாவை வழிபட்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஆலய உபகாரிகள் மற்றும் திருவிழா நன்கொடையாளர்களுக்கான முதல் திருப்பலி நடக்கிறது. காலை 6.30 மணிக்கு 2-ம் திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது. 
    தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலயம் பிரசித்திபெற்றதாகும். இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலயம் பிரசித்திபெற்றதாகும். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5ந் தேதி நடக்கிறது. தற்போது 436வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2வது திருப்பலியும் நடந்தது. 7.30 மணிக்கு பி‌ஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த கொடி பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பி‌ஷப் இவோன் அம்புரோஸ் அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது மக்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர்.

    மேலும் மக்கள் நேர்ச்சையாக கொண்டு வந்த பால், வாழைப்பழம் ஆகியவற்றை கொடிமரத்தின் அடியில் வைத்து வணங்கினர். சிலர் சிறு குழந்தைகளையும் கொடி மரத்தின் அடியில் வைத்து ஆசி பெற்றனர்.

    கொடியேற்றம் முடிந்தவுடன் நேர்ச்சையாக கொண்டு வந்த பழம், பால் உள்ளிட்ட பொருட்களை மக்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர். மதியம் 12 மணிக்கு பாதிரியார் விக்டர் லோபோ தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 
    ×