search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தபோது எடுத்த படம்.
    X
    தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தபோது எடுத்த படம்.

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு

    புனித வெள்ளியையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று காலை சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.
    கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகையையொட்டி 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏசு கிறிஸ்துவின் தலையில் முட்கிரீடம் அணிவித்து, சிலுவையை சுமக்க செய்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

    இதனை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளியன்று ஏசு கிறிஸ்து பட்ட துயரங்களை விளக்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடத்தப்படுகிறது.

    அதன்படி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று காலை சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. இதில் சிலுவையை சுமந்தவாறு உள்ள ஏசுவின் உருவச்சிலையை கிறிஸ்தவ மக்கள் ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு சென்றனர். சிலுவை பாதை வழிபாட்டில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். மக்களுக்கு மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.

    மாலையில் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது மக்கள் சிலுவையில் முத்தமிட்டு வழிபாடு செய்து பசிப்பிணி காணிக்கை செலுத்தினர். அதன்பிறகு ஏசு உயிர்நீத்ததன் அடையாளமாக ஆலயங்கள் மூடப்பட்டன.
    Next Story
    ×