என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனிமய மாதா"

    • தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.
    • திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிகளை பின்பற்றி விழாவை கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா வருகிற 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    அமைச்சர்

    அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், கமிஷனர் சாருஸ்ரீ, வருவாய் அலுவலர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    நடவடிக்கை

    திருவிழா நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா நாட்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க வேண்டும்.

    மேலும் திருவிழா கடைகளில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டங்கள், உணவுகள் தரமானதாகவும், பாதுகாப்பான முறையில் வைத்திருப்பதையும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

    இந்த ஆண்டு திருவிழாவில் முறைப்படி கொடியேற்றத்துடன் எல்லா ஆராதனைகளும், தேர்பவனி, கொடிபவனி, நற்கருணைபவனி உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடைபெறும்.

    கொடியேற்றம்

    மக்கள் அனைவரும் பனிமய மாதா அன்னையை நேரடியாக தரிசிக்கலாம். அதே போன்று திருவிழா நாட்களில் வழக்கமாக பேராலயத்தின் அனுமதியோடு நடத்தப்படும் கடைகளும், பொருட்காட்சியும் இந்த ஆண்டு நடைபெறும்.

    வருகிற 26-ந் தேதி காலை கொடியேற்றம் நடைபெறுகிறது. அடுத்த 10 நாட்களும் பேராலயத்தின் உள்ளே வழக்கமாக காலையில் நடைபெறும் திருப்பயண திருப்பலிகள், மாலையில் நடைபெறும் அருள்உரை, அருள்இரக்கஆசீர், இரவில் நடைபெறும் நற்கருணைஆசீர் ஆகியவை நடைபெறும்.

    அரசின் விதிமுறை

    திருவிழாவில் பங்கேற்கும் மக்கள் அனைவரும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி அரசின் விதிகளை பின்பற்றி விழாவை கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    புனித வெள்ளியையொட்டி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று காலை சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.
    கிறிஸ்தவ மக்கள் ஈஸ்டர் பண்டிகையையொட்டி 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இதில் ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஏசு கிறிஸ்துவின் தலையில் முட்கிரீடம் அணிவித்து, சிலுவையை சுமக்க செய்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

    இதனை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளியன்று ஏசு கிறிஸ்து பட்ட துயரங்களை விளக்கும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடத்தப்படுகிறது.

    அதன்படி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் நேற்று காலை சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. இதில் சிலுவையை சுமந்தவாறு உள்ள ஏசுவின் உருவச்சிலையை கிறிஸ்தவ மக்கள் ஆலயத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு சென்றனர். சிலுவை பாதை வழிபாட்டில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். மக்களுக்கு மோர் மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது.

    மாலையில் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அப்போது மக்கள் சிலுவையில் முத்தமிட்டு வழிபாடு செய்து பசிப்பிணி காணிக்கை செலுத்தினர். அதன்பிறகு ஏசு உயிர்நீத்ததன் அடையாளமாக ஆலயங்கள் மூடப்பட்டன.
    தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலயம் பிரசித்திபெற்றதாகும். இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா பேராலயம் பிரசித்திபெற்றதாகும். இந்த ஆலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி அனைவரும் கொண்டாடும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 5ந் தேதி நடக்கிறது. தற்போது 436வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 6 மணிக்கு 2வது திருப்பலியும் நடந்தது. 7.30 மணிக்கு பி‌ஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் ஆலயத்தில் வைக்கப்பட்டு இருந்த கொடி பேண்டு வாத்தியங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கொடிமரத்துக்கு கொண்டு வரப்பட்டு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் பி‌ஷப் இவோன் அம்புரோஸ் அன்னையின் கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது மக்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரத்துடன் புறாக்களை பறக்க விட்டனர்.

    மேலும் மக்கள் நேர்ச்சையாக கொண்டு வந்த பால், வாழைப்பழம் ஆகியவற்றை கொடிமரத்தின் அடியில் வைத்து வணங்கினர். சிலர் சிறு குழந்தைகளையும் கொடி மரத்தின் அடியில் வைத்து ஆசி பெற்றனர்.

    கொடியேற்றம் முடிந்தவுடன் நேர்ச்சையாக கொண்டு வந்த பழம், பால் உள்ளிட்ட பொருட்களை மக்கள் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர். மதியம் 12 மணிக்கு பாதிரியார் விக்டர் லோபோ தலைமையில் அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 
    தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6 மணிக்கு கொடியேற்றம் மற்றும் திருப்பலி ஆகியவை நடைபெறும். நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி வட்டார முதல்வர் மற்றும் பங்குதந்தை ஜோசப் ரொமால்டு தலைமை தாங்குகிறார். கோட்டார் மறை மாவட்டம் இளைஞர் பணிக்குழு செயலாளர் ஜெனிபர் எடிசன் மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும்.

    வருகிற 29-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் குமரி சமூக விடியல் இயக்கத்தினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், மாலையில் சிறப்பு திருப்புகழ்மாலை, நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடைபெறும். இரவு 9 மணிக்கு பனிமய அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலோரியஸ் தலைமை தாங்குகிறார். ஆயர் இல்ல அருட்பணியாளர் நெல்சன் மறையுரையாற்றுகிறார்.

    பகல் 3 மணிக்கு பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருகொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தென்தாமரைகுளம் பனிமய அன்னை பங்கு குடும்பம் வழங்கும் மக்கள் இசை கச்சேரி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையர், பங்குமக்கள், பங்கு பேரவை, நிதிக்குழு, தணிக்கை குழு ஆகியோர் செய்து வருகின்றனர். 
    ×