என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
Byமாலை மலர்27 July 2018 4:26 AM GMT (Updated: 27 July 2018 4:26 AM GMT)
தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6 மணிக்கு கொடியேற்றம் மற்றும் திருப்பலி ஆகியவை நடைபெறும். நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி வட்டார முதல்வர் மற்றும் பங்குதந்தை ஜோசப் ரொமால்டு தலைமை தாங்குகிறார். கோட்டார் மறை மாவட்டம் இளைஞர் பணிக்குழு செயலாளர் ஜெனிபர் எடிசன் மறையுரை ஆற்றுகிறார். இரவு 9 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும்.
வருகிற 29-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் குமரி சமூக விடியல் இயக்கத்தினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், மாலையில் சிறப்பு திருப்புகழ்மாலை, நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடைபெறும். இரவு 9 மணிக்கு பனிமய அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.
திருவிழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலோரியஸ் தலைமை தாங்குகிறார். ஆயர் இல்ல அருட்பணியாளர் நெல்சன் மறையுரையாற்றுகிறார்.
பகல் 3 மணிக்கு பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருகொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தென்தாமரைகுளம் பனிமய அன்னை பங்கு குடும்பம் வழங்கும் மக்கள் இசை கச்சேரி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையர், பங்குமக்கள், பங்கு பேரவை, நிதிக்குழு, தணிக்கை குழு ஆகியோர் செய்து வருகின்றனர்.
வருகிற 29-ந் தேதி காலை 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் குமரி சமூக விடியல் இயக்கத்தினர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், மாலையில் சிறப்பு திருப்புகழ்மாலை, நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடைபெறும். இரவு 9 மணிக்கு பனிமய அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.
திருவிழாவின் இறுதி நாளான 5-ந் தேதி காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலோரியஸ் தலைமை தாங்குகிறார். ஆயர் இல்ல அருட்பணியாளர் நெல்சன் மறையுரையாற்றுகிறார்.
பகல் 3 மணிக்கு பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருகொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் ஆகியவையும் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தென்தாமரைகுளம் பனிமய அன்னை பங்கு குடும்பம் வழங்கும் மக்கள் இசை கச்சேரி நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தையர், பங்குமக்கள், பங்கு பேரவை, நிதிக்குழு, தணிக்கை குழு ஆகியோர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X