search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paddhamatai"

    • கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சேரன்மகாதேவி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சில இடங்களில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் ( வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கரிசல்பட்டி, சேரன்மாகாதேவி துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    அதன்படி கரிசல்பட்டி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர்குடியிருப்பு,பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி ஆகிய பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அதேபோல் சேரன்மகாதேவி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம் பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×