search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "om sakthi valipadu mantram"

    அதியமான் கோட்டை அருகே ஓம்சக்தி வழிபாட்டு மன்றத்தில் உண்டியல் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகேயுள்ள தடங்கம் கிராமம். இந்த கிராமத்தில் ஓம் சக்தி வழிபாட்டு மன்றம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்கள் ஓம்சக்திக்கு இருமுடி கட்டுதல் நிகழ்ச்சியும், அம்மனை பக்தர்கள் தினந்தோரும் தரிக்கும் நிகழ்ச்சி போன்றவை கோவில்களில் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் நேற்று கோவில் பூஜை முடித்து விட்டு கோவில் நிர்வாகிகள் கோவிலை பூட்டி சென்றனர்.

    இன்று காலை கோவிலை திறப்பதற்காக சென்ற போது கதவுகள் திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கோவிலில் இருந்து உண்டியலை மாயமானது தெரிவந்தது.

    இந்த சம்பவம் குறித்து அதியமான் கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்ட போலீசார் திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது தடங்கம் கிராமம் அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் பதீகால் பள்ளம் செல்லும் வழியில் கோவில் உண்டியல் கிடந்தது தெரியவந்தது. அப்போது போலீசாரிடம் கோவில் நிர்வாகிகளும் சென்று பார்த்த போது ஓம் சக்தி கோவிலுக்கு சொந்தமான உண்டியல் என்பது தெரியவந்தது. இந்த உண்டியலை சில்லரை நாணயம் 50 ரூபாய் இருந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து கோவில் நிர்வாகிகள் கூறும் போது கோவில் உண்டியல் ஆண்டுக்கு ஒரு முறையே திறக்கப்படும் ஒவ்வொரு ஆண்டுகள் திறக்கப்படும் போது உண்டியலில் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் எடுக்கப்படும். கடந்த ஆண்டு பூட்டப்பட்டு உள்ள உண்டியல் ஓராண்டு மேல் உண்டியல் திறக்கப்படாமல் உள்ளதால் சுமார் 30 ஆயிரம் இருப்பதாக மன்ற நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை திருடிய நபர்கள் கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதரக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    மேலும் இதேபோல் 2015, 2017 ஆகிய வருடங்களில் கோவிலில் திருடுபோய் இருந்தது குறிப்பிடதக்கது. #tamilnews
    ×