search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "not happy"

    • தி.மு.க. ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    மதுரை

    மதுரை தெற்கு வாசல் பகுதியில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதி.மு.க. சார்பில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் நேரத்தில் மக்களிடம் கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

    ஆனால் தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருகிறார்கள். வரிக்கு மேல் வரியை போட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார்கள். தி.மு.க.வுக்கு வருகிற தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

    பொதுமக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களையும் இந்த அரசு வஞ்சித்து விட்டது. இந்த ஆட்சியில் மக்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அதி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போடுவதில் இந்த அரசு குறியாக உள்ளது.

    தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பிச்சையா எடுக்கிறார்கள்? அவர்கள் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள்.அவர்களுக்கு சொத்து எப்படி வந்தது? நாங்கள் நினைத்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க முடியும். மக்கள் நலனை மட்டுமே சிந்தித்து ஆட்சி செய்தோம்.

    தி.மு.க. அரசு அதை எல்லாம் விட்டு அ.தி.மு.க.வை பழிவாங்குவதிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறது. அதி.மு.க. எந்த சலசலப்புக்கும் அஞ்சாத இயக்கமாகும். யாரும் எங்களை மிரட்டி பார்க்க முடியாது.

    தமிழக மக்கள் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக தயாராகி விட்டார்கள். அதற்கு முன்னோட்டமாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×