search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilakkottai sand robbery"

    நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் இருந்து மணல் திருடி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் இருந்து மணல் திருடப்படுவதாக வந்த புகாரின் பேரில் சித்தர்கள் நத்தம் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குண்டலப்பட்டியில் அதிவேகத்தில் வந்த லாரியை மடக்கி சோதனையிட்டதில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்தது தெரிய வந்தது.

    இதனையடத்து லாரியை பறிமுதல் செய்து நிலக்கோட்டை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். லாரி டிரைவர் அறிவழகன் (வயது 45), டிரைவர் ஜெகதீசன் (27) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×