search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new administrator"

    • பதவியேற்பு விழா நடந்தது.
    • வட்டார தலைவர் பாலாஜி வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் பாரி பரமேசுவரன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட ஆளுநர் மணிகண்டன், முதல் துணை ஆளுநர் டாக்டர் சசிக்குமார், மண்டல தலைவர் ஜெயச் சந்திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். வட்டார தலைவர் பாலாஜி வரவேற்றார்.

    விழாவில் தலைவராக ராமசந்திரன், செயலா ளராக பாலசுந்தரம், பொரு ளாளராக கிருஷ்ணமூர்த்தி மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். பின்னர் பயனாளிகளுக்கு ஆடை கள், அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விருதுகள், தீயணைப்புத்துறைக்கு பாதுகாப்பு உபகரணங்கள், அங்கன்வாடி குழந்தை களுக்கு விளையாட்டு உப கரணங்கள், பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் இல்லத்திற்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் சிவக்குமார், பாபநாசம், பொன்னையா, குருசாமி, காந்திராஜன், சிவசங்கரன், சங்கு, பாபுசரவணன், சோழவந்தான் நகர்தலைவர் மருதுபாண்டியன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    ×