search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nava Nandis"

    • சுசீந்திரம் கோவிலில் நந்தி சங்குகளை இழைத்து ஸ்தாபிதம் செய்யப்பெற்றது.
    • தஞ்சை பெரிய கோவில் விமானம் 13 நிலைகளாக உயர்ந்துள்ளது.

    கோபுரத்தில் நந்தி

    கோயம்புத்தூர் பேரூரில் சோழன் படித்துறை அருகில் அம்பலவாணர் கோவில் இருக்கிறது. இதன் முகத்துவார மண்டபத்தின் மீது பிரமாண்டமாக ஒரு நந்தி படுத்திருக்கிறது. கோவிலுக்குள் சன்னதி முன் இருக்க வேண்டிய நந்தி இங்கே கோவிலுக்கு வெளியே கோபுரம் இருக்க வேண்டிய இடத்தில் ஊரை பார்த்துக் கொண்டு மண்டபத்தின் மேல் இருக்கிறது.

    பெங்களூர் நந்தி

    பெங்களூர் பசவன் குடியில் நந்தி 15 அடி உயரத்தில் முறைத்துப் பார்த்தபடி படுத்திருக்கும். ஆனி மாத வியாழக்கிழமைகளில் பசவனுக்கு கடலைக்காய் நைவேத்யமும் கடலை வெல்லம் உருண்டையிலான மாலையும் அணிவிப்பர்.

    ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் லேபாசி என்ற இடத்திலும் மைசூருக்கு அருகில் உள்ள சாமுண்டி மலையிலும் உள்ள நந்தியும் ஒரே கல்லினால் ஆன மிகப் பெரிய நந்திகள் ஆகும்.

    விமானத்தில் நந்தி

    தஞ்சை பெரிய கோவில் விமானம் 13 நிலைகளாக உயர்ந்துள்ளது. பதின்மூன்றாம் நிலைக்கு மேல் கற்பலகை மூடியாக அமைக்கப் பெற்றுள்ளது. அதன் நான்கு மூலைகளிலும் மூலைக்கு இரண்டு வீதம் எதிரெதிராக 8 நந்திகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 10 டன் எடையுடன் கூடிய ஒரே கல்லால் ஆனவை.

    வடஆற்காடு மாவட்டம் திருவத்திபுரம் சிவன் கோவிலில் நந்திதேவர் மூலவரைப் பார்த்து இல்லாமல் கோவிலின் வெளிவாயிலை பார்த்தபடி இருக்கிறார்.

    கொடி மரம் நோக்கி

    வட திருமுல்லைவாயில் கோவிலில் நந்தி கருவறை நோக்கி அமராமல் கொடி மரம் நோக்கி அமர்ந்துள்ளது.

    சங்காலய நந்தி

    சுசீந்திரம் கோவிலில் உள்ள பெரிய நந்தி சங்குகளை இழைத்து அதன் மூலம் ஸ்தாபிதம் செய்யப் பெற்றதாகும்.

    நவ நந்திகள்

    பத்ம நந்தி, நாக நந்தி, விநாயக நந்தி, கருட நந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி, சோம நந்தி, மகா நந்தி, சூரிய நந்தி ஆகிய நவ நந்திகள், நந்தியால் என்னும் ஊருக்கு அருகே உள்ளன. இந்த நவ நந்திகளைத் தரிசித்து பிரசட்சணம் செய்து பூஜை செய்கிறவர்களுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அஸ்வமேத யாகங்கள் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    வாளுடன் நந்தி

    திருநாகேசுவரத்தில் கருங்கல் மண்டபத்தில் வலப்புறமாக அதிகார நந்தியின் விக்ரக வடிவமுள்ளது. சிவபெருமானின் அருளால் வாள் பெற்றதால் நந்தி வீரவாளுடன் காட்சி தருகிறார். இது ஓர் அபூர்வ அமைப்பாகும்.

    நந்தியிடம் பிரார்த்தனை

    நந்தியின் காதில் தங்களது வேண்டுதல்களைச் சொல்வது பல கோயில்களில் வாடிக்கையாக நடக்கிறது. ஆனால் பெங்களூரில் அல்சூர் சோமேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தியின் மீது சாய்ந்து கொண்டு பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை சொல்கிறார்கள்.

    இதில் ரகசிய பிரார்த்தனையான திருமணத்தடை, காதலில் வெற்றி, குழந்தைபேறு, நோய்தீர, பணக்கஷ்டம் இவைகளை இந்த நந்தியிடம் கோரினாலும் சிரமம் தீரும் என்பது நம்பிக்கை! இக்கோயிலில் நான்கு முகம் கொண்ட சித்திர பிரம்மனின் சிலையும் உள்ளது.

    ×