search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National College Students"

    • எனது மண் எனது நாடு என்னும் தலைப்பில் கோவில்பட்டி அய்யனேரி கிராம சுற்று வட்டாரம் மற்றும் பள்ளிகளில் நேஷனல் கல்லூரி மாணவர்கள் 100 மரக்கன்றுகளை நட்டனர்.
    • இதில் 30-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு நாளில் அவரை நினைவு கூறும் வகையில் சுற்றுசூழலின் நலன் கருதி எனது மண் எனது நாடு என்னும் தலைப்பில் கோவில்பட்டி அய்யனேரி கிராம சுற்று வட்டாரம் மற்றும் பள்ளிகளில் 100 மரக்கன்றுகளை நட்டனர். இதில் 30-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுடைய சமூக சமுதாய செயல்பாடுகளை வெளிப்படுத்தினர்.

    இதில் அய்யனேரி ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரி காளியப்பன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கே.பாண்டி முனியம்மாள் காளியப்பன், கல்லூரி இயக்குநர் எஸ்.சண்முகவேல் மற்றும் கல்லூரி முதல்வர்கே.காளிதாச முருகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கினைப்பாளர் துணைப் பேராசிரியர் கே.சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களை வழிநடத்தினார்.

    ×