search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "namakkal east district dmk executive meeting"

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் இரா.உடையவர் தலைமையில் நடைபெற்றது.

    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் அவைத்தலைவர் இரா.உடையவர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் அனைவரையும் வரவேற்று கூட்டப்பொருள் பற்றி விளக்கமாக பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் பொன்னுசாமி முன்னாள் எம்.எல்.ஏ விமலாசிவக்குமார், பொருளாளர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பவுத்திரம் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் மாயவன், வனிதா செங்கோட்டையன், மாநில நிர்வாகிகள் ராணி, நக்கீரன், நகரெ பாறுப்பாளர் மணிமாறன், நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், ஒன்றியசெயலாளர்கள் ராமசுவாமிமுன்னாள் எம்.எல்.ஏ ஜெகநாதன், வி.கே.பழனிவேல், பி.பாலு (எ) பாலசுப்ரமணியகவுதம், துரை (எ) ராமசாமி, பி.முத்துசாமி, பாலசுந்தரம், அசோக்குமார், பேரூர் கழக செயலாளர்கள் முருகவேல், கண்ணன், அன்பழகன், என்.செல்வராசு, தனபால், எம்.சுந்தராஜ், செல்லவேல் (எ) செல்லப்பன், டி.பி.எஸ்.கார்த்திகேயன், ஜெயக்குமார், நடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தரமற்ற நிலக்கரியைஅதிக விலை கொடுத்து வாங்குவதில் கமி‌ஷன் வாங்குவதால் தரமற்ற நிலக்கரியால் நம் நாட்டிற்கு தேவையான மின் உற்பத்தி செய்யமுடியாத நிலை உள்ளது.

    தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்வதால் நம்நாட்டில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை. அளிக்கப்படுகிறது. இந்த நிலையை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×