search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother killing daughter"

    திண்டுக்கல் அருகே தலையில் கல்லைபோட்டு மகளை கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சின்னாளபட்டி:

    திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் மனைவி மணிமேகலை (வயது30). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். ராஜசேகர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    அதன்பிறகு மணிமேகலை தனது 3 குழந்தைகைளுடன் திருப்பூரில் தனது தாய் வீட்டில் தங்கி பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார். மணிமேகலையின் பெரியம்மா லட்சுமி திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளபட்டி கருணாநிதி காலனியில் வசித்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மணிமேகலை சின்னாளபட்டிக்கு வந்தார்.

    வீட்டிற்குள் பெரியம்மா லட்சுமி, அவரது கணவர் ரத்தினம் மற்றும் மணிமேகலையின் 3 குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். மணிமேகலை வீட்டு திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தார்.

    திடீரென அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்குள் எழுந்து வந்த மணிமேகலை தனது 2-வது மகள் யாழினி (9)யை தூக்கி கொஞ்சினார். பின்னர் சிறிது நேரத்தில் அருகில் இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டார். சத்தம்கேட்டு அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் விழித்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் யாழினி இறந்து கிடந்தார். இது குறித்து சின்னாளபட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிமேகலை குறித்து அவர்களது வீட்டில் விசாரித்தபோது அவர் அடிக்கடி மனநிலை பாதிக்கப்பட்டவர் போல இருப்பார் என கூறி உள்ளனர். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி ஒரு கம்பெனியில் வேலை பார்க்க முடியும் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.

    கள்ளத்தொடர்பு காரணமாக மகளை கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளையே தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கணவரை பிரிந்ததால் பெற்ற மகளை தாய் வி‌ஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    பாளை அருகே உள்ள மேலப்பாட்டத்தை சேர்ந்த விவசாயி காசி. இவரது மகள் மகராசி (வயது 27). இவருக்கும் சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2½ வயதில் சிவமகேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது.

    சென்னையில் வசித்து வந்த கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்துள்ளது. இதன் காரணமாக கணவரிடம் கோபித்து கொண்டு மகராசி மேலப்பாட்டத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இதையறிந்த குடும்பத்தினர் மற்றும் பெரியவர்கள் கணவன், மனைவியை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    எனினும் அது நடைபெறவில்லை. இந்நிலையில் இன்று காலை குழந்தை சிவமகேஸ்வரி வீட்டில் பிணமாக கிடந்தது. இதைப்பார்த்த பாட்டி சந்திரா அதிர்ச்சியடைந்து மகராசியை தேடினார். ஆனால் அவரை எங்கும் காணவில்லை. உடனடியாக இதுகுறித்து பாளை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா மற்றும் போலீசார் பிணமாக கிடந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய் மகராசியை அப்பகுதியில் போலீசார் தீவிரமாக தேடினர்.

    அப்போது அங்குள்ள ஒரு காட்டுப்பகுதியில் மகராசி நின்று கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது குழந்தையை வி‌ஷம் கொடுத்து கொன்ற திடுக்கிடும் தகவலை அவர் தெரிவித்தார். அதன் விபரம் வருமாறு:-

    எனது கணவர் அடிக்கடி என்னுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் நான் எனது தாய் வீட்டிற்கு கணவரை பிரிந்து வந்துவிட்டேன். ஆனால் தொடர்ந்து எனது குடும்பத்தார் என்னையும், எனது கணவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது நடைபெறவில்லை.

    இதனால் மனமுடைந்த நான் எனது குழந்தையை கொன்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். அதன்படி இன்று காலை அரளிவிதையை அரைத்து எனது மகள் சிவமகேஸ்வரிக்கு கொடுத்தேன். பின்னர் அங்கிருந்து இப்பகுதிக்கு வந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் போலீசார் என்னை பிடித்துவிட்டனர்’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் மகராசியை கைது செய்தனர். கணவரை பிரிந்ததால் பெற்ற மகளை தாய் வி‌ஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×