search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother son suicide"

    • தாயை கவனித்துக் கொள்ள முடியாத வேதனையில் மகனும், மகனின் நிலைமையை எண்ணி தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
    • தாய்-மகன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 72). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சுப்புலட்சுமி மகன் கணேசன் (53). தச்சுத்தொழிலாளியான இவர் பாலவனத்தத்தில் மனைவி, மகனுடன் வசித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் கணேசனுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார். மேலும் வயதான தாய்க்கு பணிவிடை செய்ய முடியவில்லை என்ற வருத்ததிலும் கணேசன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று கடம்பன்குளத்தில் உள்ள தாயை சந்தித்து விட்டு வருவதாக கணேசன் வீட்டில் கூறிவிட்டுச் சென்றார். அங்கு தாயிடம் பேசிய கணேசன் தனது உடல்நல பாதிப்பு குறித்து கூறி கவலையடைந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் அவரது தாயார் சுப்புலட்சுமியும் தனது நிலைமை குறித்து கூறியுள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த 2 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி வீட்டில் இருந்த விஷத்தை தாயும் மகனும் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய்-மகன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாயை கவனித்துக் கொள்ள முடியாத வேதனையில் மகனும், மகனின் நிலைமையை எண்ணி தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • முரளி ராஜ் பாரதி படித்து முடித்து வேலை தேடி வந்தார்.
    • கடந்த மாதம் சிதம்பரம் திடீரென மாரடைப்பால் இறந்தார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள சிதம்பரம் நகரை சேர்ந்தவர் சிதம்பரம். ஓய்வுபெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி சுபா (வயது 55). இவர்களுக்கு முரளிராஜ் பாரதி (35) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

    முரளி ராஜ் பாரதி படித்து முடித்து வேலை தேடி வந்தார். கடந்த மாதம் சிதம்பரம் திடீரென மாரடைப்பால் இறந்தார். கணவரின் பிரிவை சுபாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் கடந்த ஒரு மாதமாக அவர் விரக்தியுடன் காணப்பட்டார்.

    நேற்று சிதம்பரம் இறந்த 30-வது நாள் அனுசரிக்கப்பட்டது. வாழ்க்கையில் விரக்தியில் இருந்த சுபா கணவரின் இறப்பை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு மகன் முரளி ராஜ் பாரதியும் சம்மதித்ததாக தெரிகிறது. அதன்படி நேற்று இரவு இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை தாய்-மகன் இறந்து கிடப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர் சாத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது தற்கொலைக்கு முன் அவர்கள் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

    அதில் 'நாங்கள் அப்பாவை தேடி செல்கிறோம். நாங்கள் தற்கொலை செய்வதற்கு யாரும் காரணம் இல்லை. அப்பாவுடன் இருந்த நாட்கள் மிகவும் சந்தோசமானவை. யாரும் கவலைபட வேண்டாம். அனைவரும் நீண்ட காலம் நலமுடன் வாழ்க' சுபா கையெழுத்திட்டு எழுதியிருந்தார்.

    இதே போல் முரளி ராஜ் பாரதியும் ஆங்கிலத்தில் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. அப்பாவின் பிரிவை தாங்க முடியாமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தார். இந்த 2 கடிதங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடன் தொல்லையால் தாய், மகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். மற்றொரு சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் மகனும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மாதவரம்:

    சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு சாரங்கபாணி நகரை சேர்ந்தவர் பிரித்விராஜ். இவர் கடந்த ஜனவரி மாதம் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இவரது மனைவி இந்திராணி (வயது 50). இவர்களது மகன் தியாகராஜன் (25). போரூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    பிரித்விராஜ் வங்கியில் கடன் வாங்கி இருந்தார். அவர் இறந்துவிட்டதால் வங்கி கடனை அடைக்க வேண்டிய நிலைக்கு இந்திராணி தள்ளப்பட்டார். ஆனால் அவரால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை.

    கடன் தொல்லை அதிகரித்ததால் மனமுடைந்த இந்தி ராணி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்தநிலையில் வேலை முடிந்து மகன் தியாகராஜன் இரவில் வீடு திரும்பினார். மின் விசிறியில் தாயார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தாயின் பிணத்தை கீழே இறக்கி கட்டிலில் படுக்க வைத்தார். தாய் இறந்த துக்கம் தாங்காமல் அதே மின் விசிறியில் தியாகராஜன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதற்கிடையே நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த இந்திராணியின் மகள் உமா தாயாருக்கும், தம்பிக்கும் போன் செய்து பார்த்தார். அவர்கள் போனை எடுக்காததால் அக்கம் பக்கத்தினருக்கு போன் செய்து விசாரித்தார். அவர்கள் வீட்டின் கதவு உள்புறம் பூட்டப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு வீட்டுக்கு விரைந்தார்.

    போலீசார் அங்கு வந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் தாய்-மகன் இருவரும் பிணமாக கிடந்தனர். இருவரது பிணத்தையும் போலீசார் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருபவர் அருள் முருகன். மாதவரம் பால் பண்ணை பவானி நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் அபிஷேக் (18). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரியில் என் ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் சரியாக படிக்க வில்லை என்றதால் தந்தை அருள் முருகன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அபிஷேக் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×