search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLAs Disqualified"

    18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எடப்பாடி ஆட்சி அதிக நாள் நீடிக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #EdappadiPalaniswami #MLAsDisqualified

    பூதலூர்:

    போராடுவோம் தமிழகமே என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பிரசார பயணம் கடந்த 8-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டியில் பிரசார பயணம் நடைபெற்றது. இந்த பிரசார பயணத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். பேசும் போது கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் உரிமைகளை போராடி பெற வேண்டிய தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது. மக்கள் தமக்குள்ள உரிமைகளை பெற போராடிஆக வேண்டும். போராடாமல் தீர்வு கிடைக்காது.

     


    18 எம்.எல்.ஏக்கள் குறித்து தீர்ப்பு எப்படி இருந்தாலும் எடப்பாடி ஆட்சி அதிக நாள் நீடிக்காது. மத்தியில் ஆளும் மோடியும், மாநிலத்தில் மோடியின் எடுபிடியாக உள்ள எடப்பாடி ஆட்சியும் நீடிக்க வாய்ப்பு இல்லை. இந்த பிரசார பயணம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்த பிரசார பயணம் நிறைவு பெறும் போது மாற்றம் நிகழும்.

    தஞ்சை மாவட்டம் பயன்பெற குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. விவசாயிகள் சலுகை கேட்டால் சாக்கு போக்கு சொல்லும் மத்திய,மாநில அரசுகள் கார்பரேட் கம்பெனி முதலாளிகளான அதானி. அம்பானி ஆகியோருக்கு சலுகைகளை அள்ளி வழங்கி கொண்டிருக்கின்றன.

    தமிழகத்தில் குட்கா வழக்கை சிபிஐ விவசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிடும் காலம் விரைவில் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami #MLAsDisqualified

    3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். தொடர்ந்து தினகரன் அணியில் நீடிப்போம் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர். #TTVDhinakaran #MLAsDisqualified

    மானாமதுரை:

    18 எம்.எல்.ஏ.க் களின் தகுதி நீக்க வழக்கில் ‘சபாநாயகரின் அதி காரத்தில் தலையிட முடியாது’ என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு அளித்தார்.

    அதே அமர்வில் இருந்த நீதிபதி சுந்தர், தகுதி நீக்கம் செய்ததில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் சபாநாயகரின் உத்தரவு செல்லாது. இந்த விவகாரத்தில் நான் தலைமை நீதிபதி கருத்தில் இருந்து மாறுபடுகிறேன் என்றார். இந்த வழக்கில் எந்த முடிவும் எட்டப்படாததால் மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது எனத் தீர்ப்பு வெளியானது.

    இந்த தீர்ப்பு குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், விருதுநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளருமான சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:-

    18 எம்.எல்.ஏக்களும் தினகரன் தலைமையில் ஒற்றுமையுடன்தான் இருக்கின்றோம். சபாநாயகர் உத்தரவு செல்லும் எனத் தீர்ப்பு வந்தாலும் நாங்கள் தினகரன் தலைமையில் தான் தொடர்ந்து இயங்குவோம்.

     


     

    மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகதான் அமையும். தினகரன் தமிழகத்தின் முதல் வராவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பரமக்குடி தொகுதி டாக்டர் முத்தையா கூறுகையில், இந்த தீர்ப்பானது தொகுதி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். 3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும். டி.டி.வி. தினகரன் கரத்தை வலுப்படுத்தும் வகையில் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம் என்றார்.

    மானாமதுரை மாரியப்பன் கென்னடி கூறியதாவது:-

    நீதிமன்ற தீர்ப்பை மிகவும் எதிர்பார்த்தோம். நீதி மன்றம் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் நேர்மாறாக தீர்ப்பு உள்ளது. 9 மாதங்களாக எம்.எல்.ஏ. பணியை மேற்கொள்ள முடியவில்லை. தொகுதி மக்கள் என்னிடம் குறைகளை நேரிலும், போனிலும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தொகுதி முழுவதும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. தகுதி நீக்கம் என்ற ஒரே காரணத்திற்காக எனது தொகுதியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சர்களும் எந்த வித பணியையும் செய்வதில்லை.

    தகுதி நீக்கம் செய்வதற்கு முன்பு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று செய்யப்பட வேண்டிய திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    தற்போது தீர்ப்பு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. தீர்ப்பு நியாயமாக கிடைக்கும் என்று நம்புகிறோம். தொடர்ந்து தினகரன் அணியில் நீடிப்பேன் என்றார்.  #TTVDhinakaran #MLAsDisqualified

    ×