search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister rp uthayakumar"

    மதுரை மாவட்டத்தில் 300 கி.மீ. தூரம் சைக்கிள் பேரணி சென்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கினார்.

    மதுரை:

    ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அரசின் சாதனைகளை விளக்கிடும் வகையில் சைக்கிள் பேரணி 5 நாட்கள் நடந்தது.

    கடந்த 15-ந் தேதி மாலை மதுரை ரிங் ரோட்டில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    சைக்கிள் பேரணியில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் மதுரை மாவட்டம் முழுவதும் 1,000 இளைஞர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

    சைக்கிள் பேரணி சுமார் 300 கி.மீ. சென்று 666 கிராமங்களில் சுமார் 33 லட்சம் பொதுமக்களை சந்தித்து அரசின் சாதனைகளை அமைச்சர் விளக்கினார். மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சென்ற கிராமங்களில் எல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    அரசின் சாதனைகளை கிராம மக்களிடம் எடுத்துக் கூறினோம். ஒவ்வொரு வீட்டிலும் அ.தி.மு.க. அரசின் சாதனை திட்டங்கள் போய் சேர்ந்துள்ளது. இதனால் மக்கள் இந்த ஆட்சி தொடர வேண்டும் என்று உறுதியளித்தனர்.

    இந்த ஆட்சியையும், கட்சியையும் அம்மாவின் ஆன்மா வழிநடத்தும். கட்சியில் உள்ள 1 1/2 கோடி தொண்டர்களும் அயராது உழைத்து எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வை அமோக வெற்றி பெறும் வகையில் உழைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிறைவு நாள் விழா வில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வீரவாள் பரிசு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன், ஏ.கே.போஸ், மாணிக்கம், பெரியபுள்ளான், பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தமிழரசன், அய்யப்பன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×