search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maneka Gandhi"

    சர்வதேச யோகா தினமான நேற்று கர்ப்பிணிக்குரிய யோகாசனம் செய்த சானியா மிஸ்ராவுக்கு மேனகா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். #SaniaMirza
    புதுடெல்லி:

    இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ரா தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அக்டோபர் மாதம் அவர் தனது முதல் குழந்தையை பிரசவிப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    சர்வதேச யோகா தினமான நேற்று சானியா மிஸ்ரா தான் கர்ப்பகால யோகாசனம் செய்யும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

    ‘சர்வதேச யோகா தினமோ அல்லது வேறு எந்த நாளோ, இந்த யோகாசனம் தான் கர்ப்பகாலத்தில் என்னை உடல்தகுதியுடன் வைத்துள்ளது... நீங்கள் எப்படி?’ என்ற வாசகத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



    இதனை பார்த்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி மேனகா காந்தி, “அருமை சானியா, உடலை தகுதியாக வைத்துக்கொள்ள கர்ப்பகால யோகாசனம் செய்யும் உங்கள் வழி மகிழ்ச்சி அளிக்கிறது” என்று டுவிட்டரிலேயே பதில் தெரிவித்துள்ளார். #SaniaMirza
    இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள் 48 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என மத்திய மந்திரி மேனகா காந்தி இன்று தெரிவித்துள்ளார். #NRImarriages #ManekaGandhi
    புது டெல்லி :

    வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் திருமணம் செய்துகொண்டால் அந்த திருமணத்தை பதிவு செய்ய எந்த வரைமுறையும் இல்லாமல் இருந்தது. ஆனால், இந்தியாவில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்தை 30 நாட்களில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யவில்லை என்றால் ஒரு நாளைக்கு 5 ரூபாய் வீதம் அபராதம் விதிக்க வேண்டும் என இந்திய சட்ட ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணங்கள் 48 மணி நேரத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் அப்படி பதிவு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு பாஸ்போர்ட் அல்லது விசா வழங்கப்படாது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்தி இன்று தெரிவித்துள்ளார்.

    மேலும், தேசிய மகளிர் ஆணையத்தின் கோரிக்கையின்படி வேளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து திருமணம் செய்த பின்னர் அவர்களின் வாழ்க்கை துணையை கைவிட்டு விட்டு மீண்டும் வெளிநாடு செல்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  #NRImarriages #ManekaGandhi
    ×