என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Maduranthakam Tahsildar"
சென்னை:
காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகத்தை சேர்ந்த கே.ஜி.எத்திராஜ். தனது 9 சென்ட் நிலத்துக்கு பட்டா கேட்டு மதுராந்தகம் தாசில் தாரிடம் விண்ணப்பம் செய்தார்.
அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவரது கோரிக்கையை பரிசீலித்து பட்டா வழங்க ஐகோர்ட்டு 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதனடிப்படையில் தாசில்தார் ஏழரை சென்ட் நிலத்துக்கு மட்டுமே பட்டா வழங்கினார்.
இதையடுத்து மதுராந்தகம் தாசில்தார் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். 2013-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நீதிபதிசத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கோர்ட்டு உத்தரவிட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனுதாரர் வக்கீல் சத்தியா வாதிட்டார்.
இதையடுத்து அரசுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, 2013-ம் ஆண்டு முதல் மதுராந்தகத்தில் தாசில் தார்களாக இருந்தவர்கள் யார்? அவர்களது பெயர் என்ன? ஏன் அவர்கள் ஐகோர்ட்டு உத்தரவை 5 ஆண்டுகளாக நிறைவேற்ற வில்லை? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் காஞ்சீபுரம் கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். #Highcourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்