என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » madurai thoppur
நீங்கள் தேடியது "Madurai Thoppur"
மதுரையில் எய்ம்ஸ் அமைய இருப்பதால் அரசியல் தலைநகரான மதுரைக்கு மருத்துவ தலைநகரம் என்ற சிறப்பு கிடைத்துள்ளது. #AIIMS #AIIMSinMadurai
மதுரை:
இந்த பெயரை கேட்டாலே நோயாளிகளுக்கு சுகம் கிடைத்த மாதிரி தைரியம் வரும். அந்த அளவுக்கு நாட்டில் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் என்றழைக்கப்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வழங்கி வருகிறது.
1956-ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ‘எய்ம்ஸ்’ அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போபால் (மத்திய பிரதேசம்), புவனேஸ்வர் (ஒடிசா), ஜோத்பூர் (ராஜஸ்தான்), பாட்னா (பீகார்), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), ரிஷிகேஷ் (உத்தரகாண்ட்) ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டன.
இதுவரை 7 இடங்களில் மக்களுக்கு தரமான உயர்தர சிகிச்சை வழங்கி வரும் எய்ம்ஸ் 8-வதாக தமிழகத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து தமிழகத்துக்கு எய்ம்ஸ் அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிர நடவடிக்கை மேற்கொண்டார்.
4 ஆண்டுகள் நடத்தப்பட்ட பல்வேறு வியூகங்களுக்கு மத்தியில் எய்ம்ஸ் தமிழகத்தில் மதுரை அருகே உள்ள தோப்பூரில் அமைய உள்ளது.
தமிழ்நாட்டில் தஞ்சை, செங்கிப்பட்டி உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டன. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனைத்து சாராம்சங்களும் மதுரை தோப்பூரில் மட்டுமே இருந்தது.
மதுரை தோப்பூரில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ. 1,500 கோடி செலவில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்கான 262 ஏக்கர் நிலம் தயார் நிலையில் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பது மற்றும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் விரைவில் செய்யப்பட உள்ளன.
மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையால் மதுரை, திருமங்கலம், தேனி, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைவார்கள்.
மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல் நோயாளிகளுக்கான ஆராய்ச்சிகள், 100 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சீட், 65 நர்சிங் சீட், ஆகியவையும் ஏற்படுத்தப்படுகிறது.
750 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ சிகிச்சையில் முக்கிய பிரமுகர்கள் முதல் ஏழைகள் வரை அனைவருக்கும் தரமான சிகிச்சைகள் தரப்பட உள்ளது.
ரூ.10 ஆயிரம் செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் சிகிச்சை பெறும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
மதுரை நகரில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை விமான நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மதுரையில் எய்ம்ஸ் அமைய இருப்பதால் அரசியல் தலைநகரான மதுரைக்கு மருத்துவ தலைநகரம் என்ற சிறப்பு கிடைத்துள்ளது.
சர்வதேச நகரங்களில் மதுரையும் இடம்பெறும். வேலைவாய்ப்பு மற்றும் ரியல் எஸ்டேட், நவீன போக்குவரத்து வசதிகள், கூடுதல் விமான சேவை என பல்வேறு முக்கிய திட்டங்களும் மதுரைக்கு கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் மதுரை நாட்டின் முக்கிய நகரப்பகுதிகளில் ஒன்றானதாகும்.
மதுரையில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாக அறிவித்தனர்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், மதுரைக்கு எய்ம்ஸ் அறிவிப்பு தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும், எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் 17 மாவட்ட மக்களின் இதயக்கனியாக மாறி விட்டது என்றும் கூறினார்.
எய்ம்ஸ் அமையும் இடத்தை ஆய்வு செய்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில் தமிழகத்துக்கு கிடைத்த இந்த மாபெரும் திட்டத்துக்கு தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
பல்வேறு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எய்ம்ஸ் அறிவிப்பை மனதார வாழ்த்தி வரவேற்கிறார்கள்.
எய்ம்ஸ் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு மக்களின் நோய் தீர்க்கும் அரும் மருந்தாக விரைவில் கிடைக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பாகும். #AIIMS #AIIMSinMadurai
இந்த பெயரை கேட்டாலே நோயாளிகளுக்கு சுகம் கிடைத்த மாதிரி தைரியம் வரும். அந்த அளவுக்கு நாட்டில் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் என்றழைக்கப்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை வழங்கி வருகிறது.
1956-ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ‘எய்ம்ஸ்’ அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போபால் (மத்திய பிரதேசம்), புவனேஸ்வர் (ஒடிசா), ஜோத்பூர் (ராஜஸ்தான்), பாட்னா (பீகார்), ராய்ப்பூர் (சத்தீஸ்கர்), ரிஷிகேஷ் (உத்தரகாண்ட்) ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்பட்டன.
இதுவரை 7 இடங்களில் மக்களுக்கு தரமான உயர்தர சிகிச்சை வழங்கி வரும் எய்ம்ஸ் 8-வதாக தமிழகத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து தமிழகத்துக்கு எய்ம்ஸ் அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தீவிர நடவடிக்கை மேற்கொண்டார்.
4 ஆண்டுகள் நடத்தப்பட்ட பல்வேறு வியூகங்களுக்கு மத்தியில் எய்ம்ஸ் தமிழகத்தில் மதுரை அருகே உள்ள தோப்பூரில் அமைய உள்ளது.
தமிழ்நாட்டில் தஞ்சை, செங்கிப்பட்டி உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டன. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனைத்து சாராம்சங்களும் மதுரை தோப்பூரில் மட்டுமே இருந்தது.
மதுரை தோப்பூரில் சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ. 1,500 கோடி செலவில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதற்கான 262 ஏக்கர் நிலம் தயார் நிலையில் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையுடன் இணைப்பது மற்றும் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் விரைவில் செய்யப்பட உள்ளன.
மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையால் மதுரை, திருமங்கலம், தேனி, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன் அடைவார்கள்.
மருத்துவ சிகிச்சைகள் மட்டுமல்லாமல் நோயாளிகளுக்கான ஆராய்ச்சிகள், 100 எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சீட், 65 நர்சிங் சீட், ஆகியவையும் ஏற்படுத்தப்படுகிறது.
750 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ சிகிச்சையில் முக்கிய பிரமுகர்கள் முதல் ஏழைகள் வரை அனைவருக்கும் தரமான சிகிச்சைகள் தரப்பட உள்ளது.
ரூ.10 ஆயிரம் செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் சிகிச்சை பெறும் வசதியும் ஏற்படுத்தப்படும்.
மதுரை நகரில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை விமான நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
மதுரையில் எய்ம்ஸ் அமைய இருப்பதால் அரசியல் தலைநகரான மதுரைக்கு மருத்துவ தலைநகரம் என்ற சிறப்பு கிடைத்துள்ளது.
சர்வதேச நகரங்களில் மதுரையும் இடம்பெறும். வேலைவாய்ப்பு மற்றும் ரியல் எஸ்டேட், நவீன போக்குவரத்து வசதிகள், கூடுதல் விமான சேவை என பல்வேறு முக்கிய திட்டங்களும் மதுரைக்கு கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் மதுரை நாட்டின் முக்கிய நகரப்பகுதிகளில் ஒன்றானதாகும்.
மதுரையில் எய்ம்ஸ் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகிரங்கமாக அறிவித்தனர்.
தற்போது எய்ம்ஸ் மதுரைக்கு கிடைத்து இருப்பது அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைய உள்ள இடத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறுகையில், மதுரைக்கு எய்ம்ஸ் அறிவிப்பு தென் மாவட்ட மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும், எட்டாக்கனியாக இருந்த எய்ம்ஸ் 17 மாவட்ட மக்களின் இதயக்கனியாக மாறி விட்டது என்றும் கூறினார்.
எய்ம்ஸ் அமையும் இடத்தை ஆய்வு செய்த மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில் தமிழகத்துக்கு கிடைத்த இந்த மாபெரும் திட்டத்துக்கு தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
பல்வேறு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் எய்ம்ஸ் அறிவிப்பை மனதார வாழ்த்தி வரவேற்கிறார்கள்.
எய்ம்ஸ் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு மக்களின் நோய் தீர்க்கும் அரும் மருந்தாக விரைவில் கிடைக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பாகும். #AIIMS #AIIMSinMadurai
எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைக்கப்படுவதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதன் மூலம் 17 மாவட்ட மக்கள் பயனடைகிறார்கள். #AIIMS #AIIMSinMadurai
மதுரை:
நாட்டின் சிறந்த மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அமைக்க மத்திய பட்ஜெட்டில் கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த இடங்களை மத்திய அரசின் தேர்வுக்குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.
மதுரை தோப்பூர், தஞ்சை செங்கிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் அதற்கான வசதிகள் இருப்பதாக தேர்வுக்குழுவினர் கண்டறிந்தனர்.
தஞ்சை செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து மனு அளித்தார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று பகீரங்கமாக அறிவித்தனர். இதனால் எய்ம்ஸ் அமைவது தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் குறித்து 3 மாதத்தில் முடிவு செய்து அறிவிப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் சஞ்சய்ராய், தமிழக அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதியாகி உள்ளது. இதனால் எய்ம்ஸ் இடம் தேர்வில் இருந்து வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசிடம் 4 திட்டங்களை உடனடியாக நிறைவேற்றித் தரும்படியும் கேட்டுள்ளது.
* எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் 4 வழிச்சாலையை இணைக்க வேண்டும்.
* 20 மெகாவாட் மின் வசதி செய்ய வேண்டும். குறைந்த உயரத்தில் செல்லும் மின் இணைப்பு கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
* போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.
* எண்ணை குழாய் பதித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திடம், எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ரூ. 100 கோடி செலவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய உயர்தர சிகிச்சை அரங்குகள், மேலும் 100 மருத்துவ படிப்புக்கான வசதி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள், நர்ஸிங் படிப்புகள் ஆகியவை இங்கு இடம் பெறுகிறது.
இது தொடர்பாக மதுரை மேலூரில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், தனது கைப்பேசியில் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் சஞ்சய்ராய் அனுப்பிய குறுந்தகவலை படித்துக் காட்டினார்.
அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாகவும், அதற்காக சில கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர தமிழக அரசிற்கு மத்திய அரசு கோரிக்கை அனுப்பி உள்ளதையும் உறுதிப்படுத்தினார்.
இதையடுத்தே எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான இடம் தேர்வு உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேலும் கூறுகையில், தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை தோப்பூரில் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லியில் கிடைக்கக் கூடிய உயர் ரக சிகிச்சை மதுரையிலும் இனி கிடைக்கும். இந்த அறிவிப்பு தென் மாவட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது என்றார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur #RBUdhayakumar
நாட்டின் சிறந்த மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அமைக்க மத்திய பட்ஜெட்டில் கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த இடங்களை மத்திய அரசின் தேர்வுக்குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.
மதுரை தோப்பூர், தஞ்சை செங்கிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் அதற்கான வசதிகள் இருப்பதாக தேர்வுக்குழுவினர் கண்டறிந்தனர்.
ஆனால் மதுரை தான் எய்ம்ஸ் அமைக்க தகுதியான இடம் என்று தேர்வு செய்யப்பட்டது. ஆனாலும் அறிவிக்கப்படாததால் எங்கு அமையும்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று பகீரங்கமாக அறிவித்தனர். இதனால் எய்ம்ஸ் அமைவது தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வந்தது.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் குறித்து 3 மாதத்தில் முடிவு செய்து அறிவிப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை தேர்வு செய்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் சஞ்சய்ராய், தமிழக அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதியாகி உள்ளது. இதனால் எய்ம்ஸ் இடம் தேர்வில் இருந்து வந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய சுகாதாரத்துறை, தமிழக அரசிடம் 4 திட்டங்களை உடனடியாக நிறைவேற்றித் தரும்படியும் கேட்டுள்ளது.
* எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் 4 வழிச்சாலையை இணைக்க வேண்டும்.
* 20 மெகாவாட் மின் வசதி செய்ய வேண்டும். குறைந்த உயரத்தில் செல்லும் மின் இணைப்பு கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
* போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும்.
* எண்ணை குழாய் பதித்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திடம், எய்ம்ஸ் கட்டுமானம் குறித்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ரூ. 100 கோடி செலவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய உயர்தர சிகிச்சை அரங்குகள், மேலும் 100 மருத்துவ படிப்புக்கான வசதி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள், நர்ஸிங் படிப்புகள் ஆகியவை இங்கு இடம் பெறுகிறது.
இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 கோடி மக்கள் பயனடைகிறார்கள்.
அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாகவும், அதற்காக சில கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தர தமிழக அரசிற்கு மத்திய அரசு கோரிக்கை அனுப்பி உள்ளதையும் உறுதிப்படுத்தினார்.
இதையடுத்தே எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பான இடம் தேர்வு உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேலும் கூறுகையில், தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை தோப்பூரில் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
டெல்லியில் கிடைக்கக் கூடிய உயர் ரக சிகிச்சை மதுரையிலும் இனி கிடைக்கும். இந்த அறிவிப்பு தென் மாவட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது என்றார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur #RBUdhayakumar
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X