search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Robbery"

    மதுரையில் போக்குவரத்து அதிகாரி வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை பைபாஸ் ரோடு, நேரு நகரில் உள்ள மாணிக்கவாசகர் தெருவைச் சேர்ந்தவர் முருகவேல் (வயது 66). இவர் அரசு போக்கு வரத்துக் கழகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த 21-ந் தேதி முருகவேல் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    வீடு திரும்பிய முருகவேல் கதவு உடைக்கப்பட்டு நகை திடுட்டு போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    மதுரையில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் புகுந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம்-வெள்ளிகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கரிமேடு பாரதியார் ரோட்டைச் சேர்ந்தவர் சங்கரன் (வயது59). இவர் கான்சாமேட்டு தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று சங்கரன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 15 பவுன் தங்க கட்டி, 15 கிலோ வெள்ளி ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    ஊர் திரும்பிய சங்கரன் கதவு உடைக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி திருட்டுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருட்டுப்போன தங்கம் -வெள்ளியின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
    மதுரையில் வங்கி அதிகாரி வீட்டில் 22 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை தபால் தந்தி நகரில் உள்ள மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராமன் (வயது 65). இவர் அரசு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    வீடு பூட்டியிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சம்பவத்தன்று நள்ளிரவு அங்கு வந்து கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே சென்ற அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 22 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.

    ஊர் திரும்பிய சுந்தர் ராமன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    மதுரை அருகே வியாபாரியை வழி மறித்து பணம் மற்றும் செல்போனை 3 பேர் பறித்துச்சென்றனர். #Robberycase

    பேரையூர்:

    மதுரை திருநகர் பாலாஜி நகரைச்சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் நாகராஜ் (வயது 30). திருமங்கலம் அருகே உள்ள கருவேலம்பட்டியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்து விட்டு, நாகராஜ் வீட்டிற்கு புறப்பட்டார். கருவேலம்பட்டியை ரெயில்வே கேட் அருகே மொபட்டில் அவர் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் நாகராஜை வழி மறித்து அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து ஆஸ்டின் பட்டி போலீசில் நாகராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (58). இவர், ஊராண்ட உரப்பனூர் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு, அந்த கடைக்குள் யாரோ புகுந்து ரூ.4,150 மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் முருகேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    ×