search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold silver robbery"

    மதுரையில் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் புகுந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்கம்-வெள்ளிகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கரிமேடு பாரதியார் ரோட்டைச் சேர்ந்தவர் சங்கரன் (வயது59). இவர் கான்சாமேட்டு தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று சங்கரன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த 15 பவுன் தங்க கட்டி, 15 கிலோ வெள்ளி ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    ஊர் திரும்பிய சங்கரன் கதவு உடைக்கப்பட்டு தங்கம் மற்றும் வெள்ளி திருட்டுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருட்டுப்போன தங்கம் -வெள்ளியின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
    ×