search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai jewelry snatch"

    மதுரையில் மின்வாரிய பெண் ஊழியரிடம் 5 பவுன் நகையை பறித்து தப்பிய வழிப்பறி கும்பல் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விவேக் பிரியதர்சன். இவரது மனைவி ராஜலெட்சுமி (வயது 27) இவர், மின் வாரிய ஊழியர்.

    நேற்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பூலாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 4 பேர் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.

    இதுகுறித்து கருப்பாயூரணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு வழிப்பறி கும்பலை தீவிரமாக தேடினர்.

    இதையடுத்து மதுரை இளமனூரை சேர்ந்த பிரவீண்குமார் (16), சக்கி மங்கலம் சாரதி (17), ஆதீஸ்வரன், கார்த்திக் கண்ணன் (17) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை அருகே வாடகைக்கு வீடு தர மறுத்த முதியவரின் மனைவியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விளாங்குடி டெம்சி காலனியைச் சேர்ந்தவர் ராமையா (வயது 70). இவரது வீட்டின் கீழ்த்தளத்தில் தினேஷ் என்பவர் மனைவியுடன் குடியிருந்தார்.

    இவர் சரிவர வாடகை கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து வீட்டை காலி செய்யுமாறு கூறவே, தினேஷ் காலி செய்தார். அதன் பிறகு அவர் அந்தப்பகுதியில் வீடு தேடி அலைந்தார். கிடைக்கவில்லை.

    எனவே தினேஷ் மீண்டும் ராமையாவை சந்தித்து தனக்கு வீட்டை வாடகைக்கு தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டார்.

    இந்த நிலையில் ராமையா, மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தினேசும், அவரது கூட்டாளியும் கணவன்-மனைவியை வழிமறித்து வீடு தருமாறு கேட்டனர். அதற்கு ராமையா மறுத்து விட்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த தினேசும், கூட்டாளியும் ராமையா மனைவி அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்து கூடல் புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை அருகே நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்களிடம் நகை திருடியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள கீழகள்ளந்திரியைச் சேர்ந்தவர் நந்தீஸ்வரன். இவரது மனைவி பவித்ரா (வயது 25). நேற்று கணவன்- மனைவி இருவரும் அழகர் கோவில் சாலையில் உள்ள திருவிழான்பட்டியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள், பவித்ரா அணிந்திருந்த 5½ பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர் அருகே உள்ள சின்னசூரக்குண்டைச் சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மனைவி அய்யம்மாள் (50). இவர் பெரிய சூரக்குண்டு கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நடந்த அன்னதானத்தில் பங்கேற்று உணவு சாப்பிட்டார்.

    அப்போது அருகில் இருந்த மர்ம நபர், அய்யம்மாள் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினார்.

    இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×