search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மின்வாரிய ஊழியரிடம் நகை பறிப்பு
    X

    மதுரை அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மின்வாரிய ஊழியரிடம் நகை பறிப்பு

    மதுரையில் மின்வாரிய பெண் ஊழியரிடம் 5 பவுன் நகையை பறித்து தப்பிய வழிப்பறி கும்பல் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் விவேக் பிரியதர்சன். இவரது மனைவி ராஜலெட்சுமி (வயது 27) இவர், மின் வாரிய ஊழியர்.

    நேற்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பூலாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த 4 பேர் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி விட்டனர்.

    இதுகுறித்து கருப்பாயூரணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு வழிப்பறி கும்பலை தீவிரமாக தேடினர்.

    இதையடுத்து மதுரை இளமனூரை சேர்ந்த பிரவீண்குமார் (16), சக்கி மங்கலம் சாரதி (17), ஆதீஸ்வரன், கார்த்திக் கண்ணன் (17) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×